மகாராஷ்டிராவில் பற்றி எரியும் வன்முறை தீ.. யார் இந்த மனோஜ் ஜராங்கி பாட்டீல்?

Who Is Manoj Jarange Patil: மராத்தா இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜரங்கே பாட்டீல் யார்? ஏன் உண்ணாவிரதம் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். மகாராஷ்டிராவில் வன்முறை வெடிக்க காரணம் என்ன? முழு விவரங்களை அறிந்துக்கொள்ளுங்கள்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 1, 2023, 04:54 PM IST
  • மராட்டிய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் -மனோஜ் ஜாரங்கி பாட்டீல் உண்ணாவிதரம்
  • மனோஜ் ஜராங்கி பாட்டீல் 41 வயது விவசாயி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியில் வசிப்பவர்.
  • ஜாரங்கே 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2004 வரை வரை காங்கிரஸ் இளைஞரணித் தலைவராக இருந்தார்.
மகாராஷ்டிராவில் பற்றி எரியும் வன்முறை தீ.. யார் இந்த மனோஜ் ஜராங்கி பாட்டீல்? title=

Maratha Reservation: மராட்டிய சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு காரணமாக மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வன்முறை தீ எரிந்து கொண்டிருக்கிறது மராட்டிய சமூக அமைப்பின் போராட்டம் வன்முறையாகவும், கொடியதாகவும் மாறி வருகிறது. மராட்டிய சமூக இடஒதுக்கீடு இயக்கத்தின் சமூக தலைவரும் சமூக ஆர்வலருமான மனோஜ் ஜாரங்கி பாட்டீல் பாட்டீல் தலைமையில் நடைபெற்று வருகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மராட்டிய சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வேண்டும் எனக் கோரி மனோஜ் ஜாரங்கி பாட்டீல் ஜால்நா மாவட்டத்தின் அந்தர்வாலி சராதி கிராமத்தில் உண்ணாவிதரம் இருந்து வருகிறார்.

முன்னதாக மராட்டிய சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு குறித்து முடிவெடுக்க மகாராஷ்டிரா அரசுக்கு 40 நாட்கள் கால அவகாசம் அளித்த ஜாரங்கே, மராத்தா இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசு உறுதியான முடிவு எடுக்காததால், உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். மேலும் புதன் கிழமைக்குள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என மகாராஷ்டிர அரசை மிரட்டியுள்ளனர்.

மேலும் படிக்க - விஷமாக மாறும் காற்று.. சுவாசிப்பது கூட சிரமமாக உள்ளது.. N95 முகமூடி அணிய அறிவுரை!

யார் இந்த மனோஜ் ஜராங்கி பாட்டீல்?

மனோஜ் ஜராங்கி பாட்டீல் 41 வயது விவசாயி. இவர் மகாராஷ்டிரா மாநிலம் பீட் பகுதியில் வசிப்பவர். கடந்த சனிக்கிழமை, ஜராங்கேயில் நடந்த மராட்டிய பேரணியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போதிருந்து, அவர் தனது சமூகத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறினார். மெலிந்த உடலுடன் 41 வயதான சமூக சேவகர் இதுவரை 35 இயக்கங்களை நடத்தியுள்ளார்.

மனோஜ் ஜராங்கி பாட்டீல் வரலாறு

ஜாரங்கே 12ம் வகுப்பு வரை படித்துள்ளார். 2004 ஆம் ஆண்டு வரை வரை காங்கிரஸின் மாவட்ட இளைஞரணித் தலைவராக இருந்துள்ளார். அவர் தனது காரியத்தில் சாதித்துக்கொள்வதில் மிகவும் ஆர்வமுள்ளவர் என்று அவரைப் பற்றி கூறப்படுகிறது. மனோஜ் ஜாரங்கி பாட்டீலுக்கு மனைவி, நான்கு குழந்தைகள் உள்ளது. மேலும் அவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் பெற்றோர்கள் இருக்கிறார்கள்.

மனோஜ் ஜராங்கி பாட்டீல் கோரிக்கை என்ன?

மராத்தா சமூகம் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) பிரிவின் கீழ் அரசு வேலைகள் மற்றும் கல்வித் துறைகளில் இடஒதுக்கீடு பெற வேண்டும் என்றும், அதேநேரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு எந்த குறைபாடு இல்லாமல் முழுமையான இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்றும் ஜரங்கா கோரி வருகிறார்.

ஷிவ்பா சங்கட்னா அமைப்பு எப்பொழுது தொடங்கப்பட்டது?

மராட்டிய சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுக்கான இயக்கம் ஆகஸ்ட் 2016 இல் மராத்தா சமூகத்தால் தொடங்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த இயக்கத்திற்கு ஒரு பெரிய முகம் இல்லை. 2016 ஆம் ஆண்டு முதலே மராத்தா இடஒதுக்கீடு இயக்கத்தில் மனோஜ் ஜாரங்கி தன்னை ஈடுபடுத்துக்கொண்டார். இடஒதுக்கீடு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டமும், பாதயாத்திரையும் மேற்கொண்டனர். இருப்பினும், ஊடகங்களின் கவனத்தையோ அரசாங்கத்தின் கவனத்தையோ அவரால் ஈர்க்க முடியவில்லை.

மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

மே 2021 இல், உச்ச நீதிமன்றம் மராத்தா இட ஒதுக்கீடு கோரிக்கையை நிராகரித்தது. அது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று கூறியது. அதன் பிறகு இந்த இயக்கம் போராட வேண்டும் என முடிவுக்கு வந்தது.

மராட்டிய சமூக இடஒதுக்கீடு இயக்கத்தினர் மீது தடியடி

இந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி, மராத்தா சமூகம் இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது மகாராஷ்டிரா போலீஸ் தடியடி நடத்தியது. அமைதியான முறையில் போராட்டம் நடத்திய, யாரும் பெரிதாக கண்டுக்கொள்ளாத இந்த இயக்கத்திற்கு தடியடி சம்பவம் இது ஒரு புதிய உயிர்ப்பை அளித்தது.

மேலும் படிக்க - குண்டுவெடிப்புக்கு காரணம் என்ன...? வீடியோவில் பேசிய டொமினிக் மார்டின் - முழு பின்னணி

மகாராஷ்டிரா அரசை எச்சரித்த மனோஜ் ஜாரங்கி பாட்டீல்

செவ்வாய்கிழமை மதியம் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் மராத்தா இடஒதுக்கீடு என்ற தலைப்பில் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டது. ஆனால், இந்தப் பிரச்சனையில் சட்டப் பேரவைக் கூட்டத்தை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்ற ஜாரங்கே பாட்டீலின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மாலையில் சில செய்தி சேனல்களுடன் பேசுகையில், புதன்கிழமைக்குள் அரசாங்கம் தனது கோரிக்கைகளை ஏற்கவில்லை என்றால், வியாழக்கிழமை முதல் தண்ணீர் குடிப்பதையும் நிறுத்தி விடுவேன் என்று ஜாரங்கே பாட்டீல் மிரட்டியுள்ளார்.

எம்எல்ஏக்களின் வீடுகளை அடித்து நொறுக்கிய போராட்டக்காரர்கள்

தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்துகிறோம் என்பதை முதல்வரிடம் நேரடியாக கூற விரும்புகிறோம் என்று பாட்டீல் கூறினார். ஆனால், எங்களை தொந்தரவு செய்ய முயற்சித்தால், அதற்கு பதில் அளிக்க தயாராக உள்ளோம். கடந்த திங்கள்கிழமை (அக்டோபர் 30) மராட்டிய போராட்டக்காரர்கள், மூன்று எம்எல்ஏக்களின் வீடுகளை அடித்து நொறுக்கி, இரண்டு எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர்.

மகாராஷ்டிரா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் மராத்தியர்கள்

மகாராஷ்டிரா அரசியலில் மராத்தியர்களின் ஆதிக்கம் அதிகம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். மாநிலத்தில் சமூகத்தின் மக்கள் தொகை 30 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. முன்னதாக 2018 ஆம் ஆண்டும் மராத்தா இடஒதுக்கீடு கோரி போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகு அப்போதைய அரசு சட்டசபையில் மராத்தா இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றியது. இதன் கீழ், மாநிலத்தின் அரசு வேலைகள் மற்றும் கல்வித் துறைகளில் மராத்தியர்களுக்கு 16 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் படிக்க - ஏதோ நடக்கப்போகுது..! புல்வாமா தாக்குதலுக்கு முன் ராகுல்காந்தியின் உள்ளுணர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News