குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும்

Indian Railway Rule: நீங்கள் உங்கள் குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், இந்திய ரயில்வே தொடர்பான இந்த விதிகளை நீங்கள் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 8, 2024, 04:10 PM IST
  • குறிப்பிட்ட வயதைத் தாண்டினால் முழு டிக்கெட் எடுக்க வேண்டும்.
  • ரயில்களிலும் குழந்தைகளுக்கு டிக்கெட் எடுப்பதில் விதிமுறை இருக்கிறது.
  • உண்மையில் இதற்கான விதிமுறைதான் என்ன?
குழந்தைகளுடன் ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படிக்கவும் title=

Indian Railway IRCTC New Rules: இந்திய ரயில்வேயில் பயணம் வசதியானது மற்றும் பட்ஜெட்டுக்கு ஏற்றது. இதனால் தான், பல லட்சக்கணக்கான பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ரயிலில் பயணம் செய்ய விரும்புகிறார்கள். பொதுவாக ரயில்வேயில் குழந்தைகளுக்காக பல விதிகள் உள்ளன, அதைப் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும். இந்த விதிகள் மூலம், சிறு குழந்தைகளுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான பயண வசதிகளை ரயில்வே வழங்குகிறது. ரயில்வேயில் குழந்தைகளுக்கு என்னென்ன வசதிகள் மற்றும் புதிய விதிகள் உள்ளன என்பதையும் அது உங்களுக்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதையும் இந்த கட்டுரையில் தெரிந்துக்கொள்வோம்.

5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக ரயிலில் பயணம் செய்ய முடியும் | Railway Rules For Child:
1 வயது முதல் 4 வயது வரையிலான குழந்தையுடன் நீங்கள் ரயிலில் பயணம் செய்கிறீர்கள் என்றால், தனியாக ஒதுக்கப்பட்ட போகியில் முன்பதிவு செய்யத் தேவையில்லை. பயணச்சீட்டு இல்லாமல் 5 வயதுக்குட்பட்ட குழந்தையை பயணத்தில் அழைத்துச் செல்லலாம். இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டில் ரயில்வே சில விதிகளை மாற்றியுள்ளது. அதன்படி 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு முன்பதிவு சீட் எதுவும் வழங்கப்படாது.

மேலும் படிக்க | EPFO: முக்கிய விதிகளை ரத்து செய்த உயர் நீதிமன்றம்.... PF உறுப்பினர்களுக்கு ஷாக், விவரம் இதோ!!

குழந்தைகளுக்கு காப்பீட்டு வசதியும் தரப்படும்:
ரயில்வேயில் மற்ற பயணிகளைப் போலவே, குழந்தைகளுக்கும் பயணக் காப்பீட்டு வசதியைப் பெறுவார்கள். 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு காப்பீடு கிடைக்கும். இந்தக் காப்பீடு ரூ.5 லட்சத்துக்கு மேல் இருக்கலாம்.

முழு கட்டணத்தை எப்போது செலுத்த வேண்டும் | IRCTC Rule for Child:
உங்கள் பிள்ளையின் வயது 5 முதல் 12 வயது வரை இருந்தால், அவர்களுக்கென தனி பெர்த்தை முன்பதிவு செய்ய விரும்பினால், முழு டிக்கெட் கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், உங்கள் முன்பதிவின் போது உங்கள் 4 வயது குழந்தையின் முழு விவரங்களையும் பூர்த்தி செய்திருந்தால், அந்தக் குழந்தைக்கும் முழு கட்டணத்தையும் நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். முன்பதிவு படிவத்தில் விவரங்களை நீங்கள் நிரப்பவில்லை என்றால், உங்கள் குழந்தையுடன் இலவசமாகப் பயணம் செய்யலாம்.

12 வயது குழந்தைகளுக்கான விதிகள் இவை:
5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு தனியாக ஒதுக்கப்பட்ட இருக்கை எடுக்கவில்லை என்றால், அந்தக் குழந்தைக்கு டிக்கெட் கட்டணத்தில் பாதியை நீங்கள் செலுத்த வேண்டும். குழந்தை தனது பெற்றோர் அல்லது உடன் வருபவர் இருக்கையில் பயணம் செய்யலாம். ஆனால், 5 வயது முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கான தனி இருக்கை அல்லது படுக்கையை முன்பதிவு செய்தால், முழு டிக்கெட் கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இது முந்தைய விதி அல்ல என்றாலும். 5 வயது முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு முன்பதிவு பெட்டியில் தனி பெர்த் அல்லது இருக்கை தேவைப்பட்டால் அவர்களுக்கு முழு கட்டணம் வசூலிக்கப்படும் என்று மார்ச் 31, 2016 அன்று ரயில்வே துறை அறிவித்தது. இந்த விதி 21 ஏப்ரல் 2016 முதல் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | இந்த பிரபல வங்கிக்கு கடுமையான அபராதம் விதித்துள்ள ரிசர்வ் வங்கி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News