மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!!

8th Pay Commission: மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரண விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 4, 2024, 08:55 AM IST
  • மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது.
  • 8வது சம்பள கமிஷன்: இதற்கான தேவை ஏன்?
  • 8வது சம்பள கமிஷன் வந்தால் ஊதியம் அதிரடியாக உயரும்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் பரிசு: 8வது ஊதியக்கமிஷன்..... 44% ஊதிய உயர்வு!! title=

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு முக்கியமான செய்தி உள்ளது. அவர்களது நீண்ட நாள் கனவு நிஜமாவதற்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி புதிய அரசு அமைவதற்கு முன்பே, 8வது ஊதியக் குழு குறித்த விவாதம் நாடு முழுவதும் மீண்டும் தொடங்கியுள்ளது. சமீபத்தில், இந்திய ரயில்வே தொழில்நுட்ப மேற்பார்வையாளர்கள் சங்கம், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இந்த கடிதத்தில் 8 ஆவது ஊதியக்குழுவை அமல்படுத்துவது குறித்த சில முக்கிய தேவைகள் மற்றும் அம்சங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிறகு உருவாகும் புதிய அரசாங்கம் இந்தக் கோரிக்கையை ஏற்று 8வது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், நாட்டில் உள்ள 1 கோடி 12 லட்சம் ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு சம்பளத்துடன், ஓய்வூதியத்திலும் பெரிய மாற்றம் ஏற்படும். இது அவர்களுக்கு பெரிய நிவாரணமாக அமையும். 

8வது சம்பள கமிஷன்: இதற்கான தேவை ஏன்?

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் (Central Government Employees) மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி (Dearness Allowance) மற்றும் அகவிலை நிவாரண (Dearness Relief) விகிதங்களில் ஆண்டுக்கு இரண்டு முறை, அதாவது ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் திருத்தம் செய்கிறது. ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்து இது மாற்றப்படுகின்றது. சமீபத்தில் ஜனவரி 2024 -க்கான அகவிலைபடி 4% அதிகரிக்கப்பட்டு மொத்த அகவிலைப்படி 50% ஆக உயர்ந்துள்ளது. அடுத்த அகவிலைப்படி திருத்தம் ஜூலை 2024 -இல் செய்யப்படும். இது 3-4% அதிகரித்தால் மொத்த அகவிலைப்படி 53-54% ஆக அதியரிக்கும. இன்னும் பிப்ரவரி-மார்ச் மாதங்காளுக்கான ஏஐசிபிஐ குறியீட்டு எண்னை தொழிலாளர் அமைச்சகம் வெளியிடவில்லை. 

இதற்கிடையில் 7வது ஊதியக்குழிவின் (7th Pay Commission) ஒரு விதியை நாம் நினைவில் கொள்ளவேண்டும். இதன் படி அகவிலைப்படி 50% -ஐ எட்டும்போது, அது பூஜ்ஜியம் ஆக்கப்பட்டு, அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிலைப்படி (DA) கணக்கீடு 0, 1, 2 சதவிகிதம் என தொடங்கும். 

மேலும் படிக்க | ஹோட்டல் ரூம் தேடி அழைய தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனில் 100 ரூபாய்க்கு தங்கலாம்

எனினும் இன்னும் அரசாங்கத்தின் தரப்பிலிருந்து இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆகையால், அகவிலைப்படி பூஜ்ஜியம் ஆக்கப்படுமா, அல்லது சம்பள கணக்கீட்டிற்கு புதிய ஃபார்முலா கொண்டு வரப்படுமா அல்லது புதிய ஊதிய கமிஷன் உருவாக்கப்படுமா என்ற குழப்பம் உள்ளது. எனினும் புதிதாக அமைக்கப்படும் அரசாங்கம் புதிய ஊதியக்குழுவை உருவாக்கும் என்றே பரவலாக பேசப்படுகின்றது. 

இருப்பினும், கடந்த ஆண்டு டிசம்பரில் நிதிச் செயலாளர் டி.வி.சோமநாதன் ஒரு அறிக்கையில், தற்போது அத்தகைய திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என்று கூறியிருந்தார். 8-வது ஊதியக் குழுவுக்கான எந்தத் திட்டமும் இல்லை என்றும், அது தற்போது நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என்றும் அரசு தெரிவித்துள்ளது. எனினும் புதிய அரசாங்கம் உருவான பின்னர் அரசின் இந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். 
 
8வது சம்பள கமிஷன் வந்தால் ஊதியம் அதிரடியாக உயரும்

இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டுள்ளது. 7வது ஊதியக் குழு 2013ல் உருவாக்கப்பட்டு அதன் பரிந்துரைகள் 2016 முதல் அமல்படுத்தப்பட்டன. இதில் ஃபிட்மென்ட் ஃபாக்டரை அடிப்படையாக வைத்து 2.57 மடங்கு உயர்த்தி, சம்பளம் 14.29% ஆக உயர்ந்து அடிப்படை சம்பளம் ரூ.18000 ஆக மாறியது. இதன் அடிப்படையில், புதிய அரசு அமைந்த பிறகு, 10 ஆண்டு கால முறைப்படி, 2025-26ல் 8வது ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டால், ஃபிட்மெண்ட் ஃபாக்டர் 2.57 இல் இருந்து 3.68 ஆக உயரும் என தெரிகிறது. அதன் அடிப்படையில் சம்பளம் 44.44 சதவீதம் அதிகரிக்கும். மேலும், குறைந்தபட்ச சம்பளம் ரூ.26000 ஆக உயர்த்தப்படும். இது ஜனவரி 1, 2026 முதல் செயல்படுத்தப்படும். அரசு வழக்கமான ஊதியக்குழு முறைகளை பின்பற்றினால் இந்த ஏற்றங்கள் இருக்கலாம். எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

(பொறுப்பு துறப்பு: இந்த பதிவு தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த ஊதியக்குழு அல்லது சம்பள உயர்வுக்கான எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை. சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அரசாங்க தளங்களை அணுக பரிந்துரைக்கபப்டுகின்றது.)

மேலும் படிக்க | ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News