ரஷ்யாவிடம் இருந்து 'மலிவான எண்ணெய்' வாங்கிய பாகிஸ்தான்... ஆனாலும் சோகத்தில் அரசு!

பாகிஸ்தான் முதல் முறையாக ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்துள்ளது. பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா இடையேயான இந்த ஒப்பந்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பேரல்கள் ஆகும். இந்த எண்ணெய் ஒப்பந்தத்தில் சர்ச்சை எழுந்துள்ளது

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 13, 2023, 04:19 PM IST
  • ரஷ்யாவிடம் இருந்து முதல் முறையாக எண்ணெய் வாங்கிய பாகிஸ்தான்.
  • முதல் சரக்கு கராச்சியை சென்றடைந்துள்ளது
  • ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் 45 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் பெற்றுள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து 'மலிவான எண்ணெய்' வாங்கிய பாகிஸ்தான்... ஆனாலும் சோகத்தில் அரசு! title=

இஸ்லாமாபாத்: ரஷியாவிடம் பல முறை எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு பிறகு பாகிஸ்தான் எண்ணெய் வாங்கிய நிலையில், அதன் முதல் சரக்கு கராச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் சுத்திகரிப்பு ஆலைக்கு அனுப்பப்பட்டுள்ளது. ரஷ்யாவிடம் இருந்து பாகிஸ்தான் 45 ஆயிரம் மெட்ரிக் டன் எண்ணெய் பெற்றுள்ளது. அதன் இரண்டாவது தொகுப்பு விரைவில் பாஸ்கிஸ்தான் சென்றடைய உள்ளது. எனினும், பாகிஸ்தானுக்கு ரஷ்ய எண்ணெய் வரத்து குறித்து பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மகிழ்ச்சி அடையவில்லை. மறுபுறம், பிடிஐ ஆதரவாளர்கள் இதை இம்ரான் கானின் சாதனை என்று அழைக்கிறார்கள். இந்தக் கிரெடிட்டைப் பெறுவதற்கான போட்டா போட்டிக்கு மத்தியில், ரஷ்ய எண்ணெய் ஒப்பந்தம் மூலம் இந்தியாவையும் ஐக்கிய அரபு எமிரேட்ஸையும் பணக்காரர்களாக ஆக்கியுள்ளது என்றும், பாகிஸ்தானின் கைகளில் லாலிபாப் தான் கிடைத்துள்ளது என்றும் நிபுணர்கள் சர்ச்சையை கிளப்பியுள்ளனர். 'எண்ணெய் ஒப்பந்தம்' முழுவதையும் புரிந்துகொள்வோம்.

இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இடைத்தரகர்கள் நிறைய சம்பாதித்துள்ளனர்

பாகிஸ்தானின் பிரபல வணிக செய்தித்தாள் பிசினஸ் ரெக்கார்டரின் ஆசிரியரும், பொருளாதார விவகாரங்களில் நிபுணருமான வகாஸ் கூறுகையில், இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இடைத்தரகர்கள் பாகிஸ்தானிடமிருந்து ரஷ்ய எண்ணெயை வாங்குவதன் மூலம் நிறைய சம்பாதித்துள்ளனர். ரஷ்யாவிலிருந்து எண்ணெய் முதலில் இந்தியாவுக்கு வந்ததாக அவர் கூறினார். இதன் பிறகு, மீண்டும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றது. இதையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து மீண்டும் எண்ணெய் பாகிஸ்தானுக்கு சென்றது. பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் குஜராத் அருகே உள்ளது, அங்கு தான் இந்த எண்ணெய் தற்போது இறங்கியுள்ளது. இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் இடைத்தரகர்கள் இந்த எண்ணெய் ஒப்பந்தம்  மூலம் நிறைய பணம் சம்பாதித்துள்ளனர் என்று வகாஸ் கூறினார்.

மேலும் படிக்க | செபி உத்தரவு: ஜீ என்டர்டெயின்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிக்கை

பாகிஸ்தான் ஒப்பந்தத்தில் இந்தியா ஒரு பீப்பாய்க்கு 17 டாலர் சம்பாதிக்கிறது

இந்த எண்ணெயை ஒரு பீப்பாய்க்கு 52 டாலருக்கு ரஷ்யா இந்தியாவுக்கு விற்றதாகவும் அதன் பிறகு இந்தியா அதை ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு விற்றதாகவும் வக்காஸ் கூறினார். இதன் பிறகு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து பாகிஸ்தானுக்கு விற்கப்பட்டது. இந்த எண்ணெய் பாகிஸ்தானுக்கு ஒரு பீப்பாய் $69 செலவாகும். இந்த பாகிஸ்தான் எண்ணெய் ஒப்பந்தத்தில் இந்திய நாட்டை சேர்ந்த வணிகர் ஒரு பீப்பாய்க்கு 17 டாலர் சம்பாதித்துள்ளதாக அவர் கூறினார். ரஷ்யாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் பீப்பாய்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் பாகிஸ்தானின் கையில் லாலிபாப் மட்டுமே உள்ளது என விமர்சனம் செய்துள்ளார்.

அரசாங்கத்திடம் விளக்கம் பெறுவது மிகவும் முக்கியமானது

இந்த முழு விஷயத்திலும் அரசாங்கத்திடம் விளக்கம் பெறுவது இப்போது மிகவும் முக்கியமானது என்று பாகிஸ்தான் நிபுணர் கூறினார். இதற்குக் காரணம், இந்த எண்ணெய் ஏற்றுமதி ரஷ்யாவிலிருந்து ஈரானுக்கும், பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கும், பின்னர் பாகிஸ்தானுக்கும் சென்றதாக மற்றொரு நிபுணர் கூறுகிறார்.  எனினும், கப்பல் இந்தியாவுக்குச் சென்றது தான் தனது கணிப்பிற்கான காரணம், என்றும், இந்த எண்ணெய் ஏற்றப்பட்ட கப்பல், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்று அதே சரக்குகளை கொண்டு வந்துள்ளது என்கிறார் நிபுணர்.

மேலும் படிக்க | வீட்டு கடன் பெற வேண்டுமா? இந்த வழிகளில் எளிமையாக பெறலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News