சம்பள பாக்கியை வாங்கி தாங்க: காவல் நிலையத்தில் குவிந்த டெலிவரி ஊழியர்கள்

வெயிலிலும் மழையிலும் அலைந்து டெலிவரி செய்தோம் சம்பளம் தராமல் உரிமையாளர் கைவிரித்து விட்டார் என டெலிவரி ஊழியர்கள் ஆதங்கம்.

Written by - JAFFER MOHAIDEEN | Last Updated : May 9, 2024, 01:59 PM IST
  • அமேசான் நிறுவனத்தின் பொருட்களை டெலிவரி செய்யும் குத்தகையை எடுத்த நபர்.
  • டெலிவரி ஊழியர்களுக்கு சம்பளம் தராமல் ஏமாற்று வேலை.
  • காவல் நிலையம் வந்த ஊழியர்கள்.
சம்பள பாக்கியை வாங்கி தாங்க: காவல் நிலையத்தில் குவிந்த டெலிவரி ஊழியர்கள் title=

சென்னை திருவொற்றியூர் தாங்கல் பகுதியில் அமேசான் நிறுவனத்தின் ஆர்டர் செய்யும் பொருட்களை பெற்று
சென்னை பிராட்வே முதல் மணலி புதுநகர் வரை டெலிவரி செய்யும் குத்தகையை கபில் என்பவர் எடுத்து நடத்தி வந்ததாக தெரிய வருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகிறார்கள். 

இந்த நிலையில், கடந்த ஓராண்டுகளாக அவர் தனது ஊழியர்களுக்கு மாத சம்பளத்தை குறிப்பிட்ட தேதியில் வழங்காமல் பல நாட்கள் கழித்து வழங்கி வந்ததாக தெரிகிறது. தற்போது மார்ச் மாத சம்பளத்தை கபில்  ஊழியர்களுக்கு வழங்காமல் குத்தகை உரிமையை வேறு ஒரு நபருக்கு கைமாற்றிவிட்டு சென்றுவிட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர். 

இதனால் தங்களது சம்பளப் பணத்தை மீட்டுத் தருமாறு ஊழியர்கள் திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து பேசிய டெலிவரி ஊழியர் இந்த பிரச்சனை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இருந்து வருவதாக தெரிவித்தார். ஆரம்ப காலகட்டங்களில் வங்கி கணக்கில் சம்பளத்தை செலுத்திய கபில் அதன் பின்னர் கையில் சம்பளமாக தந்தார் எனவும், நாளடைவில் அந்த சம்பளமும் இரு தவனையாக வழங்கப்பட்டது எனவும் ஊழியர்கள் கூறுகிறார்கள். 

மேலும் படிக்க | எருமை மாட்டிற்கு பிறந்த வெள்ளை நிற எருமை... கரூரில் விந்தை சம்பவம்!

இவ்வாறாக வழங்கி வரப்பட்ட சம்பளம் மார்ச் மாதம் நிலுவையில் வைக்கப்பட்டு அந்த மாதத்திற்கு உண்டான சம்பளம் தற்போது வரை தரப்படாமல் உள்ளது. இந்த நிலையில், கபில் அவருடைய குத்தகை உரிமையை வேறு ஒரு நபருக்கு விற்று விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தாங்கள் கபிலை கேட்டதற்கு அவர் காசோலை வழங்கியதாகவும் ஆனால் அந்த காசோலையை மாற்றப்போனால் கணக்கில் குறிப்பிட்ட அளவிற்கு பணம் இல்லை எனவும்  ஊழியர்கள் தெரிவிக்கிறார்கள். 

ஸ்ரீ குமரன் சில்க்ஸ் பங்குதாரரின் மகன் கபில் என்பதால் இது தொடர்பாக நேற்று அங்கு சென்று கேட்டதாகவும் அங்கேயும் அவர் இல்லை என கை விரித்து விட்டதால் தற்போது திருவெற்றியூர் காவல் நிலையம் வந்து முறையிட்டு இருப்பதாகவும் ஊழியர்கள் தெரிவித்தனர். சுமார் 40-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மாதம் 30 ஆயிரத்திலிருந்து 50 ஆயிரம் வரை சம்பளம் உள்ளது. வெயிலிலும் மழையிலும் சரியான நேரத்தில் தாங்கள் டெலிவரி செய்து தங்களது சம்பளத்திற்காக தற்போது காத்திருப்பதாகவும், உரிமையாளர் கை விரித்துவிட்ட நிலையிலே அவரிடத்தில் இருந்து சம்பளத்தை பெற்று தர வேண்டும் என்று திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருப்பதாகவும் ஊழியர்கள் ஆதங்கத்தோடு தெரிவித்தனர்.

மேலும் படிக்க | பெண் ஆசிரியரை கத்தியை காட்டி பலாத்காரம் செய்த கொடூரன்..தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News