ஆடு, மாடு, கோழி என.. எடப்பாடி பழனிச்சாமிக்கு குவியும் சீர்வரிசைகள்!

Edappadi Palaniswami: அதிமுகவின் பொதுச்செயலாளராக பழனிச்சாமி தேர்வானத்தை அடுத்து கட்சியின் தொண்டர்கள் அவரை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறி வருகின்றனர். வருபவர்கள் ஆடு, மாடு, கோழி, தேங்காய் பழம், இனிப்பு வகைகள் என சீர்வரிசியுடன் வருகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 3, 2023, 05:47 PM IST
  • அதிமுகவின் பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
  • வானவேடிக்கை, தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என வரவேற்பு.
  • சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் கட்சி தொண்டர்கள் முகமிட்டுள்ளதால் விழா கோலமாக காட்சி
ஆடு, மாடு, கோழி என.. எடப்பாடி பழனிச்சாமிக்கு குவியும் சீர்வரிசைகள்! title=

சேலம்: அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையடுத்து  தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தாரை தப்பட்டை முழுங்க ஆடு மாடு கோழி என சீர்வரிசைகள் குவிக்கிறது. தொண்டர்களின் வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் எடப்பாடி பழனிச்சாமி. சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பகுதிகள் விழாக் கோலம் போல காட்சியளிக்கின்றன. 

அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்ற நாள் முதல் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. சென்னையில் இருந்து கார் மூலம் நேற்று சேலம் வந்த அவருக்கு ஒவ்வொரு மாவட்டங்களிலும் மாவட்ட எல்லைகளிலும் கட்சி தொண்டர்கள் பொதுமக்கள் ஆயிரக்கணக்கானோர் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர் .

நேற்று மாலை சேலம் வந்த அவருக்கு வான வேடிக்கை, தாரை தப்பட்டை, கோலாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் என தமிழகத்தில் உள்ள பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் வானவேடிக்கையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று நெடுஞ்சாலை நகரில் அவரது வீட்டில் முகாம்மிட்டுள்ள எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அணி அணியாக தாரை தப்பட்டை உடன் சீர்வரிசியுடன் வருவதால் அந்த பகுதியை விழாகோலம் பூண்டுள்ளது.

மேலும் படிக்க: ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது - எடப்பாடி பழனிசாமி

முன்னாள் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்திக்க தங்களது ஆதரவுகளுடன் ஆட்டுக்குட்டி, கன்று குட்டி மற்றும் கோழி ஆகியவற்றோடு தேங்காய் பழம் இனிப்பு வகைகளை சீர்வரிசையாக மேளதாளத்துடன் எடுத்து வந்து அவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

இதே போல தமிழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் முன்னாள் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என நெடுஞ்சாலை நகர் களை கட்டி உள்ளது பல மணி நேரம் நின்று கட்சித் தொண்டர்களை நேரடியாக சந்தித்து சால்வை மாலை மற்றும் அவர்கள் கொடுத்தும்  பரிசுகளை மகிழ்ச்சியோடு எடப்பாடி பழனிசாமி வாங்கி வருகிறார். 

நேற்று முதல் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்கள் முகமிட்டுள்ளதால் அந்த பகுதியே விழா கோலமாக காட்சி அளிக்கிறது..

மேலும் படிக்க: பொதுச்செயலாளர் ஆகும் ஈபிஎஸ்! ஒபிஎஸ்-க்கு மீண்டும் செக்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News