ரேவதி நட்சத்திரத்தில் இணையும் குரு-புதன்! ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்!

நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது. 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 26, 2023, 06:00 PM IST
  • நிலம் அல்லது சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் மிகவும் சாதகமானது.
  • நிதி நிலை, தொழில் வளர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பலன்களை பெறுவீர்கள்.
  • வாழ்க்கையின் அற்புதமான காலகட்டமாக இருக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் இணையும் குரு-புதன்! ‘இந்த’ ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும்! title=

நவக்கிரகங்களில் சுப கிரகமாக திகழ்பவர் குரு பகவான். இவரது பார்வையே ஒருவரை உயர்வான இடத்திற்குக் கொண்டு போய் வைத்துவிடும். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் யோகம் பெற்று அமைந்திருந்தால், வறுமையில் இருப்பவனும் கூட ஏழு தலைமுறைக்கு சொத்து சேர்க்கும் நிலைக்கு உயர்த்தப்படுவான். அரண்மனை போன்ற வீடு அமைவதும், அதனை அனுபவிக்கும் பாக்கியம் தருவதும் குரு தான். குரு யோகம் பெற்றால், வணங்காதவர்களை கூட இருகரம் கூப்பி வணங்க வைத்துவிடும். மறுபுறம் கிரக உலகில் புதன் இளவரசன் என்று அழைக்கப்படுகிறார். இந்த கிரகம் கௌரவம், பேச்சு மற்றும் புத்திசாலித்தனத்தின் காரணியாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரத்தின்படி, புதன் கிரகத்தை வலுவாகக் கொண்ட ஒரு நபர், தனது பேச்சின் மூலம் மக்களைக் கவரும் சக்தியை கொண்டுள்ளார். தொழில் மற்றும் வேலை இரண்டிலும் வெற்றிக் கொடியை நாட்டுகிறார். ஒருவருடைய ஜாதகத்தில் புதன் கிரகம் மட்டும் வலுவாக இருந்தால் போதும், எப்பேர்ப்பட்ட சூழ்நிலையிலும் அவர் தன்னுடைய அறிவாற்றலின் மூலமாகத் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக்கொண்டு வெற்றிகளை குவித்து விடுவார். ஜாதகத்தில் புதன் வலிமை பெற்றிருக்கும் ஒருவர் எதையும் நேர்மறைச் சிந்தனையுடன் அணுகுவார்கள். எத்தனைத் தோல்விகள் வந்தாலும், எந்தச் சூழ்நிலையிலும் மனம் தளர மாட்டார்கள். 

இந்நிலையில், இந்த இரு முக்கிய சுப கிரகங்களான குரு - புதன்-வியாழன் ரேவதி நட்சத்திரத்தில் இணைவதால் சில ராசிகள் காட்டில் பண மழை பெய்யும் என்கின்றனர் ஜோதிட வல்லுநர்கள். 

மேஷ ராசி

இந்த இரண்டு சுப கிரகங்களின் கூட்டணியினால் மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடி கட்டி பறக்கும். மூதாதையர் சொத்துக்களையும் பெறலாம். மார்ச் கடைசி வாரத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். அதுமட்டுமல்லாமல் பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளும் கிடைக்கும். தற்போது இருக்கும் வேலையில் பதவி உயர்வும் அல்லது புதிய வேலையும் இந்த காலகட்டத்தில் கிடைக்கலாம். ஏதேனும் ஒரு சொத்தில் முதலீடு செய்ய விரும்பினால், இந்தச் சூழல் ஒரு நல்ல நேரமாக இருக்கும். இந்த காலகட்டத்தில் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. 

மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியில் இருந்து தப்பிக்க... வீட்டில் வன்னி மரச்செடியை நடவும்!

மிதுன ராசி

மிதுன ராசிக்கு வியாழன் மற்றும் புதன் இணைவது மிகவும் பலன் தரும். உங்கள் வேலையில், தொழிலில் பல வாய்ப்புகளைப் பெறுவீர்கள். குறிப்பாக பண ஆதாயம் மற்றும் உறவுகளில் திருப்தி. இது தவிர, இந்த நேரம் உங்கள் தொழில் மற்றும் பதவி உயர்வு போன்றவற்றின் அடிப்படையில் மிகவும் சாதகமாக இருக்கும். இது தவிர, தொழிலில் முன்னேற்றமும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் கடின உழைப்பு பாராட்டப்படும். இது தவிர வாகனங்கள், நிலம், சொத்துக்கள் வாங்கும் வாய்ப்பும் உருவாகி வருகிறது. பணத்தை முதலீடு செய்ய இது சரியான நேரம் மற்றும் எதிர்காலத்தில் லாபம் பெற வாய்ப்பு உள்ளது. 

விருச்சிக ராசி

புதன் மற்றும் குரு இணைவதால், உங்கள் நிதி நிலை மேம்படும். இது தவிர வருமானமும் அதிகரிக்கும். பண வரவு மற்றும் பொருளாதார நன்மைகள், அதிர்ஷ்டத்தின் ஆதரவு மற்றும் வெளிநாட்டு பயணத்தின் மகிழ்ச்சி ஆகியவற்றைப் பெறலாம். இதனுடன், இந்த காலகட்டத்தில் ஆன்மீக விஷயங்களில் உங்கள் நாட்டம் அதிகமாகக் காணப்படுகிறது. படைப்புத் துறைகளுடன் தொடர்புடையவர்களுக்கு, இந்த கூட்டணி சுப காலத்தை கொண்டு வரும். நிதி நிலை வலுவாக உள்ளது மற்றும் புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். 

தனுசு ராசி

தனுசு ராசிக்காரர்களுக்கு இந்தக் கூட்டணி மிகவும் பலன் தரும். வேலை மாறுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கலாம். இதைச் செய்வதன் மூலம் உங்கள் தொழிலில் சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். இது தவிர, நீங்கள் நிலம் அல்லது சொத்து வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த நேரம் மிகவும் சாதகமானது. நிதி நிலை, தொழில் வளர்ச்சி போன்றவற்றின் அடிப்படையில் சிறந்த பலன்களை பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையின் அற்புதமான காலகட்டமாக இருக்கும். இந்த காலத்தில், பெண்கள் புதியதாக தங்க நகைகள் வாங்குவார்கள். 

கும்பம் ராசி

புதன் மற்றும் குரு கூட்டணி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். இந்த நேரத்தில் நீங்கள் எங்கிருந்தோ திடீர் பண ஆதாயங்களைப் பெறலாம். இந்த காலம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அதுமட்டுமின்றி உங்கள் பேச்சிலும் பலம் இருக்கும். வியாபாரிகள் பல நன்மைகளைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைவீர்கள். மேலும் இந்த வெற்றி உங்கள் கடின உழைப்பின் அடிப்படையில் மட்டுமே அடையப்பட்ட வெற்றியாக இருக்கும். மே மாதத்தில், நீங்கள் ஆன்மீக விஷயங்களில் அதிக நாட்டம் பெறலாம். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரியுடன் நீங்கள் நல்ல இணக்கத்துடன் இருப்பீர்கள். நீண்ட நாட்களாக தடைப்பட்டிருந்த காரியம் இனிதே நிறைவேறும்.

மேலும் படிக்க | சகல சங்கடங்களையும் போக்கும் சங்கடஹர சதுர்த்தி விரதம்! கடைபிடிக்கும் முறை!

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | மேஷத்தில் நுழையும் புதன்! சவால்களை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News