சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்... வெற்றிகள் குவியும்

Sani Vakra Nivarthi: சனியின் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Oct 17, 2023, 05:09 PM IST
  • ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருள் இருக்கும். ​​
  • இந்த காலகட்டத்தில் சிறப்பு நிதி நன்மைகளைப் பெறுவார்கள்.
  • சனிபகவானின் அருளால் இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.
சனி வக்ர நிவர்த்தி: இந்த ராசிகளுக்கு நல்ல நாட்கள் ஆரம்பம்... வெற்றிகள் குவியும் title=

சனி வக்ர நிவர்த்தி, ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். மனிதர்கள் செய்யும் செயல்களுக்கு ஏற்ப அவர் பலன்களை அளிக்கிறார். அனைத்து கிரகங்களின் மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. 

ஜோதிடக் கண்ணோட்டத்தில், சனி பகவான் மிகவும் முக்கியமான கிரகமாக கருதப்படுகிறார். அவை அனைத்து கிரகங்களிலும் மிக மெதுவாக நகரும் கிரகமாக உள்ளார். இதனால் ராசிகளில் அவரது தாக்கமும் மிக அதிகமாக இருக்கும். அவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல இரண்டரை வருடங்கள் ஆகும். சனி ஒரு ராசியில் மற்றொரு ராசிக்குள் நுழையும் போது அது சனி பெயர்ச்சி எனப்படும்.

சனி நவம்பர் 4, 2023 அன்று வக்ர நிவர்த்தி அடைகிறார். அதாவது அதன் பிறகு அவர் நேரான இயக்கத்தில் பயணிப்பார். சனி பகவானின் வக்ர நிவர்த்தியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிக்காரர்களுக்கு இது மிக நல்ல விளைவுகளை கொண்டு வரும். இவர்களுக்கு இந்த காலத்தில் பல நல்ல செய்திகள் கிடைக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த காலம் நல்ல வரப்பிரசாதமாக இருக்கும். 

சனியின் வக்ர நிவர்த்தியால் அதிகப்படியான நற்பலன்களை பெறவுள்ள ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

மகர ராசி

மகர ராசி சனிபகவானுக்கு மிகவும் பிடித்தமான ராசிகளில் ஒன்றாகும். நவம்பர் 4, 2023 முதல் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையும்போது மகர ராசிக்காரர்களுக்கு நல்ல நேரம் தொடங்கும். இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். முதலீட்டிலும் லாபம் அடைவீர்கள். இது தவிர சனிபகவானின் அருளால் உத்தியோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற பலன்கள் கிடைக்கும். சனி பகவான் இந்த ராசிக்காரர்கள் மீது அருள் மழையை பொழிவார்.  பூர்வீகச் சொத்துக்கள் பெருகும். மொத்தத்தில், சனியின் வக்ர நிவர்த்தி மகர ராசிக்காரர்களுக்கு மிகவும் நல்லதாக இருக்கும்.  

கும்ப ராசி 

அக்டோபர் 4 ஆம் தேதி ஏற்படவுள்ள சனி வக்ர நிவர்த்தி கும்ப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்த ராசிக்காரர்கள் அபரிமிதமான நிதி நன்மைகளை பெறுவார்கள். சனிபகவான் இந்த ராசிக்கு அதிபதியாக இருப்பதால், அவர் இந்த ராசிக்காரர்கள் மீது முழுமையான அருளை பொழிவார். இதன் விளைவாக, வணிகம் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தைக் காணும். இது தவிர, உத்தியோகத்தில் சாதகமான மாற்றங்கள் காணப்படும். மேலும், இந்தக் காலத்தில் பணத் தட்டுப்பாடு இருக்காது. இப்படிப்பட்ட நிலையில் சனி நேரடியாக இருப்பது கும்ப ராசிக்காரர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்றே கூறலாம்.

மேலும் படிக்க | சுக்கிரன் - சனி உச்சம்.. நவம்பர் மாதம் ராஜ வாழ்க்கை பெறப்போக்கும் ராசிகள்

துலா ராசி

துலா ராசி உள்ளவர்களின் ஜாதகத்தில் சனி பகவான் உச்சம் பெற்று இருக்கிறார். இந்த ராசியை சேர்ந்தவர்கள் சன்மார்க்க செயல்களை செய்யும் போது சனிபகவானின் ஆசீர்வாதத்தை பெறுவார்கள். ஜோதிட வல்லுநர்களின் கூற்றுப்படி, நவம்பர் 4 ஆம் தேதி நடக்கவுள்ள சனியின் வக்ர நிவர்த்தி துலாம் ராசிக்காரர்களுக்கு நல்ல பலனைத் தரும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஏற்கனவே வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். இது தவிர, இந்த காலகட்டத்தில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் கடனில் இருந்தால் அதிலிருந்து இப்போது விடுதலை பெறலாம். மொத்தத்தில் துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த மாற்றம் சுபமாகவும் நன்மையாகவும் இருக்கும்.

தனுசு ராசி 

ஜோதிடக் கணக்கீடுகளின்படி, தனுசு ராசியை ஆளும் கிரகம் குரு. சனி மற்றும் குரு இடையே நட்பு உணர்வு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் நவம்பர் 4-ம் தேதி சனிபகவானின் வக்ர நிவர்த்தியால் தனுசு ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்கும். உண்மையில், இந்த நேரத்தில் நீங்கள் சனி பகவானின் மங்களகரமான பார்வையைப் பெறுவீர்கள். அதன் சுப பலன் காரணமாக, தொழிலில் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வேலையில் பதவி உயர்வு ஏற்படும். 

ரிஷப ராசி

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவானின் அருள் இருக்கும். ​​இந்த காலகட்டத்தில் சிறப்பு நிதி நன்மைகளைப் பெறுவார்கள். சனிபகவானின் அருளால் இந்த காலகட்டத்தில் வேலையில் பதவி உயர்வு கிடைக்கும். இது தவிர வியாபாரத்தில் பொருளாதார முன்னேற்றம் அதிகமாக இருக்கும். அதே சமயம் கடன் பிரச்சனைகளில் இருந்தும் இக்காலத்தில் நிவாரணம் பெறலாம். திடீர் பண ஆதாயமும் உண்டாகும். மூதாதையர் சொத்துக்களால் பண ஆதாயம் உண்டாகும். உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தத்தில், சனியின் வக்ர நிவர்த்தி காலத்தில், ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவதோடு, சுப பலன்களையும் பெறுவார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | 24 மணி நேரத்தில் பெரிய மாற்றம் ஏற்படும், இந்த ராசிகளுக்கு பொற்காலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News