அன்புள்ள சென்னை மேயருக்கு! விஷால் எழுதிய மிக்ஜாங் புயல் பிரச்சனை வீடியோ வைரல்

Actor Vishal Trending Video: சூறாவளி மிக்ஜாங் பாதிப்பு தொடர்பாக நடிகர் விஷால் வெளியிட்ட வீடியோ வைரலாகிறது. அவருடைய ஆதங்கம், சென்னை மக்கள் மனதில் எழும் இயல்பான கேள்வியாக இருக்கிறது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2023, 08:29 AM IST
  • சூறாவளி மிக்ஜாங் பாதிப்பு
  • 2015இல் இருந்து இன்னும் மாறவில்லையே? கேள்வி எழுப்பும் நடிகர் விஷால்
  • கோபத்தில் கொந்தளிக்கும் நடிகர் விஷால்
அன்புள்ள சென்னை மேயருக்கு! விஷால் எழுதிய மிக்ஜாங் புயல் பிரச்சனை வீடியோ வைரல் title=

சென்னை: சென்னையில் பெய்து வரும் கனமழையினால், வாழ்க்கையே ஸ்தம்பித்துபோய்விட்டது. மக்கள் படும் அவதிக்கு எல்லை இல்லை என்றே சொல்லலாம். மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை விடாமல் கொட்டும் நிலையில், சென்னையில் திரும்பிய திசையெல்லாம் வெள்ள நீர் காடாக காட்சியளிக்கிறது. மக்கள் வெளியில் செல்ல முடியாமல் வீட்டிக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றன. அடிப்படைத் தேவையான உணவு கூட கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். வீடுகள் மற்றும் சாலைகளில் முழங்கால் அளவுக்கும் மேல் தண்ணீர் இருக்கிறது.

கால்வாய்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதுடன், சாலைகளிலும் தண்ணீர் ஆறாக பாய்ந்தோடுகிறது. சில இடங்களில் திடீர் பள்ளங்களும் உருவாகின்றன. இந்த நிலையில், அடைமழை காரணமாக சென்னை அண்ணா நகரில் உள்ள நடிகர் விஷாலின் வீட்டையும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் மழைவெள்ளத்தால் பலரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இதையடுத்து நடிகர் விஷால் வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடகப் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. அந்தப் பதிவில், அவர், தனது மனவேதனையை எழுதியதுடன், அதை தானே பேசி வீடியோவாகவும் இணைத்துள்ளார். அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான் என்று சொல்லும் விஷால் சொல்லும் விஷயங்களும், கேட்கும் கேள்விகளும், ஆதங்கமும், சென்னை மக்கள் மனதில் எழும் இயல்பான கேள்வியாக இருப்பதால் இந்த வீடியோ வைரலாகிறது.

மேலும் படிக்க | சென்னை மக்களே அலெர்ட்... நிக்காமல் வெளுக்கும் மிக்ஜாம்... வெதர்மேனின் லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

நடிகர் விஷாலின் சூறாவளி மிக்ஜாங் மழை வெள்ளம் வீடியோ இது....

வைரல் வீடியோ

இந்த வீடியோவில் நடிகர் விஷால் தெளிவாக குறிப்பிட்டுச் சொல்லும் விஷயம் என்னவென்றால், நான் பொதுமக்களில் ஒருவன் என்பது அடிகோடிட்டு சொல்லப்பட வேண்டிய விஷயம்.

விஷாலின் ஆதங்கம் மட்டுமல்ல, மக்களின் மனதிலும் இருக்கும் புகார்களின் சாரம்சம் இது தான்.

“அன்புள்ள சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் உட்பட மற்ற அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த வீடியோவை சமர்ப்பிக்கிறேன். நீங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என நம்புகிறேன், உங்கள் குடும்பத்துடன் வீட்டில் பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன், குறிப்பாக வடிகால் நீர் உங்கள் வீடுகளுக்குள் நுழையாது மற்றும் மிக முக்கியமாக, எந்தவித சிக்கலும் இல்லாமல் உணவு மற்றும் மின்சாரம் கிடைக்கும் என்றும் நம்புகிறேன். நீங்கள் இருக்கும் அதே நகரத்தில் வசிக்கும் குடிமகனாகவும், உங்களுக்கு வாகக்ளித்த வாக்காளராகவுமான நாங்கள் அதே நிலையில் இல்லை. மழைநீர் வடிகால் திட்டம் முழுவதும் சிங்கப்பூருக்காகவா அல்லது சென்னைக்காகவா?” என்று கேள்வி எழுப்பும் நடிகர் விஷால், இது தொடர்பாக மேலும் தனது ஆதங்கத்தை பதிவு செய்கிறார்.

மேலும் படிக்க | மிக்ஜாம் புயல்: ரஜினி வீட்டருகே திடீரென பெரும் பள்ளம் - 2 கார், ஆட்டோ, கிரேன் விழுந்ததால் அதிர்ச்சி

”2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட மழைவெள்ளத்தின் போது ஏற்பட்ட துன்பத்தில் உள்ள மக்களுக்கு உதவ நாங்கள் சாலைக்கு வந்தோம், ஆனால் 8 ஆண்டுகளுக்குப் பிறகு இன்னும் மோசமான நிலையைப் பார்ப்பது பரிதாபமாக இருக்கிறது என்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது.அடு ஏன் என்பதை எங்களுக்குத் தெரிவிக்க முடியுமா?”

”இந்த நேரத்தில் உணவுப் பொருட்கள் மற்றும் குடிநீர் தேவைக்காக நாங்கள் தொடர்ந்து உதவி செய்கிறோம்ம், ஆனால் இந்த நேரத்தில் ஒவ்வொரு தொகுதியின் அனைத்து பிரதிநிதிகளும் வெளியே வந்து, மக்களின் பயம் மற்றும் துயரத்தை துடைத்து நம்பிக்கை ஊட்டி, மக்களுக்கு உதவியை செய்ய விரும்புவார்கள் என்று நினைக்கிறேன்”.

”நான் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதும்போது வெட்கத்தால் தலை குனிந்தேன். உதவிக்காக எதிர்பார்ப்பது என்பது ஒரு அதிசயத்திற்காக காத்திருப்பதா என்ற கேள்வியும், குடிமக்களுக்கான கடமை என்றால் என்ன என்ற கேள்வியும் எழுகிறது. கடவுள் ஆசிர்வதிக்கட்டும்”.

நடிகர் விஷாலின் இந்தக் கடிதம் அமைச்சர்களையும் அதிகாரிகளையும் சங்கடத்தில் ஆழ்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், சென்னை மழையால் கஷ்டப்படும் சாமானியர்களுக்கு இந்த கடிதத்தில் உள்ள வரிகள் ஒவ்வொன்றும் உண்மையானது என்று தோன்றும் என்பதால், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

மேலும் படிக்க | சென்னை புயலில் மனிதர்கள் உள்ளே! முதலைகள் வெளியே... மிக்ஜாம் சூறாவளி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News