விஜய் - வெற்றிமாறன் படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய மாரி செல்வராஜ்!

சூர்யாவின் வாடிவாசல் மற்றும் விஜய்யுடன் இயக்குனர் வெற்றிமாறனின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மாரி செல்வராஜ் கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : Nov 20, 2023, 02:27 PM IST
  • மாரி செல்வராஜ் முக்கிய இயக்குனராக உள்ளார்.
  • சமீபத்தில் மாமன்னன் படத்தை இயக்கி இருந்தார்.
  • அடுத்த துருவ் விக்ரமை வைத்து இயக்க உள்ளார்.
விஜய் - வெற்றிமாறன் படம் குறித்து முக்கிய அப்டேட் கூறிய மாரி செல்வராஜ்! title=

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் போன்ற படங்களை இயக்கி இயக்குனர் மாரி செல்வராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டார். அதில், வெற்றிமாறன் போன்ற இயக்குனரால் சூர்யா மற்றும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கும் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை படைக்கும் என்றும், ஏற்கனவே உள்ள சாதனைகளை முறி அடிக்கும் என்றும் கூறி உள்ளார்.  திரையுலகில் தற்போதுள்ள வசூல் சாதனைகள் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதற்கு அல்லது இல்லாமல் செய்வதற்கு ஒரு பெரிய அளவுகோலாக எப்படி எடுத்துக் கொள்ளப்படுகின்றன என்பதைப் பற்றி மாரி செல்வராஜ் பேசி இருந்தார்.  

மேலும் படிக்க | பிக்பாஸ் 7 போட்டியில் இருந்து இந்த வாரம் வெளியேறும் போட்டியாளர் இவர்தான் 

படத்தின் வசூல் எவ்வளவு முக்கியம் என்பது குறித்து பேசிய மாரி செல்வராஜ், சூர்யா போன்ற பெரிய நடிகருடன் இயக்குனர் வெற்றிமாறன் பணியாற்றும் போது, படத்தின் வியாபாரம் பெரிய அளவில் இருக்கும் என்றும், வரும் காலங்களில் தளபதி விஜய்யுடன் அவர் பணியாற்றினால் தற்போதுள்ள வசூல் சாதனைகள் முறியடிக்கப்படும் என்றும் கூறி உள்ளார். வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கவுதம் மேனன் ஆகியோரை வைத்து விடுதலைப் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு பிறகு, சூர்யாவை வைத்து வாடிவாசல் படத்தை இயக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். 

இப்படத்தின் கதை பிச்சி மற்றும் மருதன் ஆகியோர் ஜல்லிக்கட்டு திருவிழா மற்றும் பிச்சியின் தந்தையின் மரணத்திற்கு காரணமான காளையை அடக்கப் போவதை சுற்றி நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், கோட்டா நீலிமா எழுதிய ஷூஸ் ஆஃப் தி டெட் என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கதையில் வெற்றிமாறன் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்க உள்ளார் என்று நீண்ட காலமாக செய்திகள் வந்து கொண்டு உள்ளன.  மேலும், வெற்றிமாறன் விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகவும், அவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் தன்னுடைய கமிட்மென்ட் முடிந்த பிறகு அந்த படத்தை இயக்க உள்ளதாகவும் கூறி இருந்தார்.

சூர்யா வாடிவாசல் படத்திற்காக நீண்ட நாட்களாக காளையை வளர்த்து வருகிறார்.  சிறிய படமாக விடுதலை படத்தை எடுக்க நினைத்த வெற்றிமாறன், தற்போது மிகப்பெரிய படமாக மாறி உள்ளது.  முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  வாடிவாசல் படத்தின் டெஸ்ட் சூட் கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்றது.  இதில் சூர்யா கலந்து கொண்டு நடித்து இருந்தார்.  இதன் புகைப்படங்களும் அந்த சமயத்தில் வைரலாக சென்றது.

மேலும் படிக்க | படப்பிடிப்பு தளத்தில் கங்கனா.. திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் (ஜீ தமிழ் நியூஸ்) பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு, ஆன்மீகம், ஆயிலகம் என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News