Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள்

நமது உடல் எப்படி சோர்வடைகிறதோ, அதேபோல் நமது மூளையும் சோர்வடைகிறது. இதனால் மனம் பாரமாக இருப்பது போன்ற  உணர்வு ஏற்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Apr 24, 2022, 02:24 PM IST
  • மன சோர்வுக்கு நிவாரணம் தரும் ஆயுர்வேத மருந்துகள்.
  • மூளை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மன சோர்வுக்கான முக்கிய காரணங்கள்.
Brain Health: மூளை சோர்வு, மன பாரத்தை நீக்கும் அற்புத மூலிகைகள் title=

நமது உடல் சோர்வடைவதை போலவே மூளையும் சோர்வடைகிறது. இந்த சோர்வு காரணமாக, சில சமயங்களில் மனம் பாரமாக இருப்பது போன்ற உணர்வு ஏற்படத் தொடங்குகிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.

உங்கள் மனம் சோர்வடையும் போது தலையில் பாரம், மனச் சோர்வு, எரிச்சல், கோபம், பதற்றம், யாரிடமும் பேச விருப்பமில்லாத நிலை போன்றவை ஏற்படுகின்றன. இந்த பிரச்சினைகள் அனைத்தும், நீங்கள் உங்கள் மூளை ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதையே குறிக்கிறது.

மேலும், உணர்ச்சி ஆரோக்கியத்தில் வேலை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. மனதின் கனத்திற்கு வேறு என்ன காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்று பார்ப்போம்.

மேலும் படிக்க | Heart Health: இதய நோய்களை மருந்து இல்லாமல் குணப்படுத்த செய்ய வேண்டியவை என்ன

மன சோர்வுக்கான காரணங்கள்

மன சோர்வு உங்கள் வேலையை பாதிக்கிறது. மன சோர்வுக்கான காரணங்கள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். நீடித்த நோய், மருந்துகளை நீண்ட காலம் எடுத்துக் கொள்ளுதல், அதிக மன அழுத்தத்தை எடுத்துக்கொள்வது போன்றவை அனைத்தும் மன சோர்வுக்கான முக்கிய காரணமாக இருக்கலாம்.

மன சோர்வுக்கு நிவாரணம் ஆயுர்வேத மருந்துகள் 

மனச் சோர்வைத் தவிர்க்க மூன்று ஆயுர்வேத மருந்துகள் பலன் தரும். இது நிச்சயம் உங்களுக்கு மன நிம்மதியைத் தரும். இதில் அஸ்வகந்தா, சங்கபுஷ்பம் மற்றும் பிராமி ஆகியவை அடங்கும்.

மேலும் படிக்க | Health Alert! கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிக்க காரணமாகும் ‘5’ பழக்கங்கள்

அஸ்வகந்தா ஒரு தெய்வீக மருந்து, இது உங்கள் மன அழுத்தத்தை விடுவிக்கிகிறது. இந்த மருந்தை நோயின் போது மட்டுமே உட்கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை. சுறுசுறுப்பாக இருக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.

பிராமி உங்கள் நினைவாற்றலை அதிகரிக்கும். இதன் மூலம், மன சோர்வை போக்கவும், ஹார்மோன் சமநிலையை பராமரிக்கவும் உதவுகிறது. நினைவாற்றல் திறனை அதிகரிக்கவும், மறதி பிரச்சனை நீங்கவும், பிராமியை உட்கொள்வது நல்ல பலனைத் தரும்.

அதே சங்கபுஷ்பம் மூன்றாவது மருந்து மனதை கூர்மையாக்க மிகவும் உதவுகிறது. இது சங்கபுஷ்பம் என்று அழைக்கப்படுகிறது. இதனை உட்கொள்வதால் உடலும் மனமும் புத்துணர்ச்சி பெறும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இதய துடிப்பை சீராக்கும் ‘பொட்டாஷியம்’; இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News