11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்!

World Bizarre News: பெண் ஆசிரியை ஒருவர் தான் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் பயிலும் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : May 4, 2024, 03:58 PM IST
  • அந்த மாணவனுடன் மெசேஜில் அந்தரங்கமாக பேசி வந்துள்ளார்.
  • இந்த குற்றதத்தை பள்ளி வளாகத்திலும் மேற்கொண்டுள்ளார்.
  • அந்த ஆசிரியைக்கு வயது 24 ஆகும்.
11 வயது மாணவனுடன் முறையற்ற உறவு... ஆசிரியையின் அத்துமீறிய செயல்! title=

World Bizarre News: ஆசிரியர்கள் தங்களின் மாணவர்களுடன் பாலியல் ரீதியில் உறவு வைத்துக்கொள்ளும் சம்பவங்களை நாம் இப்போது அடிக்கடி பார்த்து வருகிறோம். இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் உலகம் முழுவதும் அரங்கேறி வருகிறது. பெண்கள், சிறார்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனைகள் விதிக்கப்பட வேண்டும் என்பதே மனித உரிமை ஆர்வலர்களின் தொடர் கோரிக்கையாக இருந்து வருகிறது. 

அந்த வகையில், அமெரிக்காவில் தொடக்க நிலை பள்ளியின் பெண் ஆசிரியை ஒருவர் 11 வயது மாணவனுடன் முறையற்ற உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தற்போது அந்த ஆசிரியை மீது பாலியல் அத்துமீறல் வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, 13 வயதுக்கும் குறைவான சிறாருக்கு எதிரான முதல் நிலை குற்றமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முறையற்ற உறவு

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த மேடிசன் பெர்க்மான் (24) என்பவர் அவர் பணியாற்றும் தொடக்க நிலை பள்ளியில் 11 வயது சிறாருடன் முறையற்ற உறவில் இருந்துள்ளார் என குற்றஞ்சாட்டு எழுந்தது. மேலும் மேடிசனின் திருமணம் 3 மாதங்களில் நடைபெற இருந்த சூழலில் இந்த குற்றச் சம்பவம் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | 25 கன்னிப் பெண்கள்... இந்த காலத்திலும் அந்தப்புரம் - வடகொரிய அதிபரின் சேட்டை!

கடந்த வியாழக்கிழமை, ஹட்ஸன் நகரில் உள்ள ரிவர் கிரஸ்ட் எலிமெண்டரி பள்ளியில் ஏற்கத்தகாத நிகழ்வு நடந்திருப்பதாக செயின்ட் குரோயிக்ஸ் கவுண்டியில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.  5ஆம் வகுப்பு மாணவனுக்கும், மேடிசனுக்கும் இடையில் முறையற்ற உறவு இருந்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

அதிர்ச்சியடைந்த பெற்றோர்

பாதிக்கப்பட்ட அந்த மாணவனுக்கு மேடிசன் பல அத்துமீறிய மெசேஜ்களை அனுப்பியுள்ளார். இதன் ஸ்கிரீன்ஷாட்களை பாதிக்கப்பட்ட மாணவனின் பெற்றோர் அந்த புகாரில் இணைத்துள்ளனர். தினமும் அந்த சிறாருக்கு மெசேஜ் செய்திருக்கிறார், மேடிசன். அதுமட்டுமின்றி அந்த மெசேஜ்களில் தன்னை முத்துமிடுவதும், தன்னை அந்தரங்கமாக தொடுவதும் எப்படி இருக்கிறது என அந்த சிறாரிடம் மேடிசன் கேட்டுள்ளார். இந்த குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் பள்ளி வளாகத்திலேயே நடந்திருப்பதாக தெரிகிறது. குறிப்பாக, மதிய உணவு இடைவேளையின் போதும், பள்ளி முடிந்த பின்னரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட சிறார் பெயர் உடைய ஒரு கோப்பு மேடிசனின் பேக்கில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. அதில் பல்வேறு குறிப்புகள் மேடிசன் - சிறார் இடையேயான உடல்ரீதியிலான இணைப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. மேடிசன் தனது நீண்ட நாள் காதலனுடன் வரும் ஜூலை மாதம் திருமணம் செய்ய உள்ளதாக கூறப்படும் நிலையில், பாதிக்கப்பட்ட சிறாரின் மொபைல் நம்பரை அவனின் தாயார் மூலம் கடந்த டிசம்பர் மாதம் மேடிசன் பெற்றுள்ளார். அதன்பின்னரே தொடர்ந்து இந்த சம்பவங்கள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. 

மேடிசன் 25 ஆயிரம் அமெரிக்க டாலர் மதிப்பிலான பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். மேலும் இவர் அந்த பள்ளி வளாகத்திற்கு வருவதற்கோ அல்லது பள்ளி விழாவில் கலந்துகொள்வதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் மே 30ஆம் தேதி மீண்டும் இவர் நீதிமன்றத்தில் ஆஜராவார் என கூறப்படுகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் அதிர்ச்சியும், வருத்தமும் கொள்வதாக தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க | 16 வயது மாணவருடன் காரில் உடலுறவு... பெண் ஆசிரியரை கையும் களவுமாக பிடித்த போலீசார்!
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News