காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா?

நம்மில் பலருக்கு, காலையில் உணவு சாப்பிடும் பழக்கமே இருக்காது. இதனால் உடலில் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் தெரியுமா?   

Written by - Yuvashree | Last Updated : May 2, 2024, 02:21 PM IST
  • காலையில் எழுந்ததும் செய்ய வேண்டிய ஒன்று
  • இதை செய்யவில்லை என்றால் வெயிட் போடும்
  • இதை செய்தால் உடலுக்கு நிறைய ஆற்றல் கிடைக்கும்.
காலையில் ‘இந்த’ தப்பு செய்தால் கண்டிப்பா வெயிட் போடும்! என்ன தெரியுமா? title=

“காலையில் என்ன சாப்ட..?” என்று கேட்டால் “காலைலையா..? நான் மார்னிங் சாப்பிடறதே இல்ல…நேரா மதிய சாப்பாடுதான்..” என்று சிலர் பெருமையாக கூறுவதுண்டு. காரணம், இவர்கள் சிறுவயதில் இருந்தே காலையில் சாப்பிட்டு பழக்கப்படாமல் இருப்பர். காலையில் உணவை தவிர்ப்பதால், பின்னாளில் பெரும் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் பலர் கூறியும் பலர் தங்கள் உடல் நலன் நன்றாக இருக்கும் வரை இது குறித்து கவலையே படுவதில்லை. ஆனால், மொத்தமாக சேர்த்து வைத்து இது உடலில் உபாதையை ஏற்படுத்தும் போது, அந்த உடல் வலியை தாங்கிக்கொள்வது அவர்கள்தான். எனவே, காலையில் ஏன் கண்டிப்பாக சாப்பிட வேண்டும் என்பது குறித்தும், அப்படி சாப்பிடாமல் போனால் என்ன நேரும் என்பது குறித்தும் இங்கு பார்ப்போம். 

உடலையும் மூளையையும் ஆற்றலுடன் வைத்துக்கொள்ளும்:

இரவு முழுவதும் தூங்கிய பிறகு உஙள் உடலும் மனதும் கண்டிப்பாக தொய்வில்லாமல் ஆற்றலுடன் உணர வேண்டியது அவசியம். எனவே, காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவது உங்கள் உடலில் க்ளூகோஸ் அளவை அதிகரிக்க உதவும். இதனால், உங்கள் மூளையும் உடலும் நல்ல ஆற்றல் பெறும். காலையில் சாப்பிடாமல் போனால், உடலும் மூளையும் சுறுசுறுப்பின்றி மந்தமாக செயல்படும். இதனால் நாம் செய்யும் வேலைகள் அல்லது படிக்கும் பாடத்தில் கவனம் செலுத்த முடியாமல் போகலாம். 

மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்:

காலையில் எழுந்தவுடன் சாப்பிடுவதால் உங்கள் மெட்டபாலிச சத்துகள் அதிகரிக்கும். நீங்கள் சாப்பிடும் உணவு உங்களுக்கு ஆற்றல் அளிக்கும் போது, இதற்கு பின்னால் மெட்டபாலிச சத்து அதிகரிக்கும் செயல்முறையும் நடைபெறும். காலையில் சிற்றுண்டியை எடுத்துக்கொள்ளவில்லை என்றால், அன்றைய நாளை எதிர்கொள்வதற்கான மெட்டபாலிச சத்து, உங்கள் உடலில் குறைந்து காணப்படும். இதனால், உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களால் அது முடியாமல் பாேகலாம். 

மேலும் படிக்க | இரவு உணவை தவிர்த்தால் உடல் எடை குறையுமா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

சுகர் லெவலை கட்டுப்படுத்தும்:

உங்கள் ரத்த அளவில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கண்டிப்பாக, காலை சிற்றுண்டியை தவிர்க்க கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சுகர் லெவல் அதிகரித்தால், திடீர் மயக்கம், அதிகமாக சாப்பிட வேண்டும் என்று தோன்றுதல், போன்ற மாறுதல்கள் ஏற்படும். எனவே, சர்க்கரை நோய் இருப்பவர்கள், கண்டிப்பாக காலை உணவை தவிர்க்கவே கூடாது. காலை உணவை சரிவர, சரியான அளவில் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஊட்டச்சத்து அளிக்கிறது:

உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை எடுத்துக்க்கொள்ள உதவும் ஒரு சிறந்த வழி, காலை உணவை ஸ்கிப் செய்யாமல் சாப்பிடுவதாகும். சரியாக டயட் இருந்து, உடலை பார்த்துக்கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள் கண்டிப்பாக காலை சிற்றுண்டியை தவிர்க்க கூடாது. காய்கறிகள், மொத்த தானியங்கள் மற்றும் மெல்லிய புரதம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லதாகும். 

உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உதவும்:

காலை உணவை சரிவர எடுத்துக்கொள்வதால், கண்டிப்பாக நம் உடல் எடையை சரியாக கட்டுக்கோப்பில் வைத்துக்கொள்ளலாம் என சில மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. காலை உணவை தவிர்ப்பவர்கள் பெரும்பாலும் கூடிய எடையுடனும், தொப்பையுடனும் இருப்பதாகவும் அமெரிக்காவை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சி ஒன்று தெரிவித்திருக்கிறது. எனவே, இனி காலையில் சாப்பிடுவதை மறவாதீர்கள்! 

மேலும் படிக்க | Weight Loss Tips: கொழுப்பை எரிக்க, தொப்பை கரைய... சுவையான ‘5’ காலை உணவுகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News