மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆரம்பமே அதிரடி: 50%-51% டிஏ, எகிறும் சம்பளம்

7th Pay Commission: இதுவரை செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் புதிய ஆண்டில் டி.ஏ. 50% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என தெரிகிறது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 3, 2023, 10:21 AM IST
  • 2024 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 4% அல்லது 5%?
  • புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுமா?
  • மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது?
மத்திய அரசு ஊழியர்களுக்கு 2024 ஆரம்பமே அதிரடி: 50%-51% டிஏ, எகிறும் சம்பளம் title=

7வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: தீபாவளிக்கு முன்னதாக, மத்திய மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத்தை அதிகரித்து அறுவிப்பை வெளியிட்டது. நவம்பரில், ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் அதிகரித்துள்ளதோடு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் மற்றும் 3 மாத அரியர் தொகையும் பரிசாக கிடைத்துள்ளது. இப்போது அடுத்த அகவிலைபப்டி திருத்தம் ஜனவரி 2024 இல் இருக்கும். இருப்பினும் அந்த அதிகரிப்பு ஜூலை 2023 முதல் டிசம்பர் 2023 வரையிலான ஏஐசிபிஐ குறியீட்டு எண்களின் அடிப்படையில் செய்யப்படும். இதுவரை செப்டம்பர் வரையிலான ஏஐசிபிஐ எண்கள் வந்துள்ளன. இதன் அடிப்படையில் புதிய ஆண்டில் டி.ஏ. 50% அல்லது அதற்கு மேல் அதிகரிக்கும் என தெரிகிறது. 

2024 ஜனவரியில் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும்? 4% அல்லது 5%? 

மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள்ளின் டிஏ மற்றும் டிஆர் விகிதங்களை ஜனவரி மற்றும் ஜூலை என ஆண்டுக்கு 2 முறை திருத்தம் செய்கிறது. இது ஏஐசிபிஐ குறியீட்டின் (AICPI Index) அரையாண்டுத் தரவைப் பொறுத்தது. 2023 ஜூலைக்கான புதிய விகிதங்கள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இப்போது அடுத்த டிஏ உயர்வு (DA Hike) 2024 ஆம் ஆண்டில் இருக்கும். இது ஜூலை முதல் டிசம்பர் 2023 வரையிலான AICPI குறியீட்டுத் தரவைப் பொறுத்தது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாத ஏஐசிபிஐ குறியீட்டு எண்களுக்குப் பிறகு, இப்போது செப்டம்பர் 2023 இன் புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அகில இந்திய சிபிஐ-ஐடபிள்யூ 1.7 புள்ளிகள் குறைந்து செப்டம்பரில் 137.5 ஐ எட்டியுள்ளது. இதன் பிறகு டிஏ மதிப்பெண் 48.54 சதவீதமாக உள்ளது. தற்போது வரை டிஏ எண்ணிக்கையில் 2.50 சதவீதம் அதிகரித்துள்ளது. அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கான புள்ளிவிவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இந்த எண்ணிக்கை அக்டோபரில் 49% -ஐத் தாண்டினால், டிசம்பர் மாதத்திற்குள் 50% -ஐத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அகவிலைப்படி (Dearness Allowance) மீண்டும் 4% அதிகரிக்கலாம். இருப்பினும் அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களின் தரவுகள் வந்தவுடன் தான் இதில் ஒரு தெளிவு கிடைக்கும். இதில் இறுதி முடிவை மத்திய அரசுதான் எடுக்கும். 

மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு: EMI மிஸ் ஆனால் இனி அபராதம் கிடையாது, விவரம் இதோ

புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்படுமா?

இதில் சில அம்சங்களை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்:

- அடுத்த ஆண்டு ஜனவரி 2024 -இல் அகவிலைபப்டி மீண்டும் 4% உயர்த்தப்பட்டால், ஊழியர்களின் (Central Government Employees) மொத்த அகவிலைப்படி 50% ஆக உயரும். அத்தகைய சூழ்நிலையில் ஊழியர்களின் சம்பளம் திருத்தப்படும். ஏனெனில் 7 வது ஊதியக் குழு அமைக்கப்படட் போது, மத்திய அரசு சம்பள திருத்தம் பற்றிய விதிகளை நிர்ணயித்துள்ளது. அதன் படி, டிஏ 50% அடையும் போது அது பூஜ்ஜியமாக மாற்றப்படும். 50% டிஏ தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்த்து வழங்கப்படும். அதன் பிறகு டிஏ கணக்கீடு பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கும் என்றும் முடிவு செய்யப்பட்டது. இதனுடன், பல வகையான கொடுப்பனவுகளும் 25% வரை அதிகரிக்கலாம்.

- 7வது சம்பள கமிஷன் 2013 -இல் அமைக்கப்பட்டது. அதன் பரிந்துரைகள் 2016ல் அமல்படுத்தப்பட்டன. அகவிலைப்படி 50% அடைந்து பூஜ்ஜியமாக மாறினால், அரசாங்கம் புதிய ஊதியக் குழுவை, அதாவது 8வது ஊதியக் குழுவை (8th Pay Commission) அமைக்க வேண்டும், அல்லது சம்பள உயர்வு தொடர்பாக புதிய விதிமுறை கொண்டு வர வேண்டும். இதுவரை 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழு அமைக்கப்பட்டு வருவதால், 2024ல் புதிய ஊதியக் குழுவை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டியிருக்கும். எனினும் அரசு தரப்பிலிருந்து அது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் தென்படுகின்றான. 

அகவிலைப்படி கணக்கீடு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி இப்படி கணக்கிடப்படுகிறது:

{கடந்த 12 மாதங்களின் சராசரி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு-2001=100-115.76/115.76}X100. 

மத்திய பொதுத் துறை ஊழியர்களுக்கான சூத்திரம் பின்வருமாறு :

{ 3 மாதங்களின் சராசரி அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு (அடிப்படை ஆண்டு-2001=100-126.33/126.33}X100. 

செப்டம்பர் 2023 ஏஐசிபிஐ குறியீட்டின் தரவு

- தொதொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்துடன் இணைக்கப்பட்ட அலுவலகமான தொழிலாளர் பணியகத்தால், நாட்டின் 88 முக்கிய தொழில் மையங்களில் உள்ள 317 சந்தைகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சில்லறை விலைகளின் அடிப்படையில் தொழில்துறை தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீடு ஒவ்வொரு மாதமும் தொகுக்கப்படுகிறது. இந்த அட்டவணை 88 மையங்கள் மற்றும் அகில இந்திய அளவில் தொகுக்கப்பட்டு அடுத்த மாதத்தின் கடைசி வேலை நாளில் வெளியிடப்படுகிறது. 2023 செப்டம்பர் மாதத்திற்கான குறியீடு இந்த செய்திக்குறிப்பில் வெளியிடப்படுகிறது.

- செப்டம்பர் 2023க்கான அகில இந்திய CPI-IW 1.7 புள்ளிகள் குறைந்து 137.5 ஆக இருந்தது. மாதா மாத சதவீத மாற்றத்தின் அடிப்படையில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 1.22 சதவீதம் குறைந்துள்ளது. அதே சமயம் கடந்த ஆண்டு இதே மாதத்தில் 0.84 சதவீதம் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது. செப்டம்பர் 2023 -க்கான ஆண்டுக்கு ஆண்டு பணவீக்கம் 4.72 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் இது கடந்த மாதம் 6.91 சதவீதமாகவும், ஓராண்டுக்கு முன்பு இதே மாதத்தில் 6.49 சதவீதமாகவும் இருந்தது. இதேபோல், உணவுப் பணவீக்கம் கடந்த மாதம் 10.06 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 6.52 சதவீதமாக உள்ளது. 

மேலும் படிக்க | NPS புதிய விதி... SLW வசதி பயனாளிகளுக்கு பயனளிக்குமா..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News