கார்த்திகை தீபம்: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா

Karthigai Deepam Today's Episode Update:  மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : May 13, 2024, 03:40 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்.
  • இன்று நடக்கப் போவது என்ன.
  • ஜீ தமிழ் தொலைக்காட்சியின் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம்.
கார்த்திகை தீபம்: மீனாட்சியை பார்க்க வந்த மாப்பிள்ளை.. ஆனந்துக்கு அதிர்ச்சி கொடுத்த தீபா title=

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக் பேக்டரிக்கு வந்திருந்த வெளிநாட்டு பிசினஸ் மேன்களிடம் ஆங்கிலத்தில் பேசி மிஷின் குறித்து விளக்கம் கொடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது கார்த்தி மீது ஏற்கனவே காதலில் விழுந்த ரம்யாவுக்கு இதைப் பார்த்து மேலும் காதல் அதிகமாகிறது. அதைத்தொடர்ந்து அபிராமி வீட்டில் ஆனந்த் மற்றும் ரியா உட்கார்ந்து பேசிக் கொண்டிருக்கும் போது யாரோ ஒருவர் மீனாட்சி தேடி வீட்டுக்கு வருகிறார். 

மீனாட்சி இருக்காங்களா அவங்கள பாக்கணும் என்று கேட்க ஆனந்த் முதல்ல நீங்க யாருன்னு சொல்லுங்க என்று கேட்க மேட்ரிமோனியில் மாப்பிள்ளை வேணும்னு ஆட் கொடுத்து இருந்தாங்க அதை பார்த்து தான் வந்துவிட்டேன் என்று சொல்ல கடுப்பாகும் ஆனந்த் மீனாட்சினு யாருமில்லை என்று சொல்லி அவனை துரத்துகிறான். 

இந்த நேரம் பார்த்து வெளியே வரும் தீபா ஒரு நிமிஷம் மீனாட்சி இந்த வீட்டு பொண்ணு தான் என்று கூப்பிட்டு உட்காரவைத்து அவங்க வெளியே போயிருக்காங்க நான் போன் போட்டு வர சொல்றேன் என்று சொல்லி மீனாட்சி வீட்டுக்கு வர வைக்கிறாள். 

மீனாட்சி பார்த்ததும் அந்த நபர் அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்க எப்ப கல்யாணம் வச்சுக்கலாம் என்று கேட்க ஆனந்த் எனது கல்யாணமா என்று அதிர்ச்சி அடைகிறான். நீ எதுக்கு இப்ப கல்யாணம் பண்ண போற என்று மீனாட்சி இடம் சண்டை போட அவள் நீங்க உங்களுக்கு புடிச்ச ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்தீங்க நான் ஒரு கல்யாணம் பண்ணிக்க கூடாதா என்று கேள்வி கேட்கிறாள். 

அதன் பிறகு ஆனந்த் வந்தவனிடம் அவள் என் பொண்டாட்டி இன்னும் விவாகரத்து கூட ஆகல என்று சொல்ல பரவால்ல அதெல்லாம் வாங்கிக்கலாம் என்று சொல்லி கேஷுவலாக எடுத்துக் கொள்ள ஆனந்த் அவளுக்கு ரெண்டு குழந்தை இருக்கு என்று சொல்கிறான். ஓ அப்படியா ரெண்டு குழந்தை பெத்த மாதிரி நம்பவே முடியல இன்னும் ஸ்லிம்மா அழகா இருக்கீங்க என்று மீனாட்சி பார்த்து அசடு வழிய தீபா நாளைக்கு கோவில்ல வச்சு மீதியை பேசிக்கலாம் என்று அவரை அனுப்பி வைக்கிறார். 

மேலும் படிக்க | கோபத்தில் குதித்த ஆதி! சபதம் எடுத்து டிவிஸ்ட் கொடுத்த ஸ்வேதா! இதயம் சீரியல் அப்டேட்

அதன் பிறகு தீபா மீனாட்சியிடம் அவருக்கு உங்க மேல இன்னும் காதல் இருக்கு, ரியா தான் ஏதோ பண்ணி வைத்திருக்கிறாய் என்று சொல்ல மீனாட்சி ஆமா எனக்கும் இப்பதான் அவர் மேல கொஞ்சம் நம்பிக்கை வந்து இருக்கு என்று பேசுகிறாள். 

அடுத்ததாக தீபா ரம்யா வீட்டுக்கு வர ரம்யா அவளை வரவேற்று தன்னுடைய அப்பாவுக்கு என்னுடைய ஸ்கூல் ஃப்ரெண்ட் தீபா என்று அறிமுகம் செய்து வைக்கிறாள். ரம்யாவின் அப்பா கோடி கோடியா பணமும் சொத்தும் இருக்கு ஆனா ரம்யாவுக்கு ஒரு கல்யாணம் பண்ணி பாக்கணும்னு ஆசையா இருக்கு, கல்யாணத்துக்கு மட்டும் சம்மதம் சொல்ல மாட்டா அவளுடைய கல்யாணத்தை பார்க்காமலேயே போய் சேர்ந்திடுவேன் போல என்று வருத்தப்பட்டு பேச தீபா அவகிட்ட நான் பேசுறேன் என்று ஆறுதல் சொல்கிறாள்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

மேலும் படிக்க | பூரி ஜெகன்நாத் - ராம் பொதினேனி கூட்டணியில் உருவாகி உள்ள டபுள் ஐஸ்மார்ட்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News