இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் இந்தியில் பேசியதால் வேலையை இழந்த நபர்!

இந்தியாவை சேர்ந்த அனில் வர்ஷ்னி நீண்ட காலமாக அலபாமாவில் ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரருடன் பணிபுரிந்தார்.  

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 2, 2023, 10:17 AM IST
  • எந்த ஒரு ரகசிய தகவலையும் அந்த அழைப்பில் தெரிவிக்கவில்லை என அனில் வர்ஷினி தகவல்.
  • வர்ஷ்னி பாதுகாப்பு விதிகளை மீறியதாக மற்ற ஊழியர்கள் "தவறாக" புகாரளித்ததாக வழக்கு.
  • இரண்டு நிமிடம் ஹிந்தியில் பேசிய அனில் வார்ஷினி.
இறக்கும் தருவாயில் இருப்பவரிடம் இந்தியில் பேசியதால் வேலையை இழந்த நபர்! title=

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 78 வயதான பொறியாளர், இந்தியாவில் உள்ள இறக்கும் நிலையில் உள்ள உறவினருடன் இந்தியில் வீடியோ அழைப்பில் பேசியதற்காக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சட்டச் சிக்கலை மேற்கோள் காட்டி ஊடகங்கள் இந்த செய்தியை வழங்கியுள்ளன. அனில் வர்ஷ்னி நீண்ட காலமாக அலபாமாவில் ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரருடன் பணிபுரிந்தார், மேலும் அவர் நீதிமன்றத்திலிருந்து நீக்கப்பட்ட முடிவை சவால் செய்துள்ளார். இந்தியாவை சேர்ந்த அனில் வர்ஷ்னி நீண்ட காலமாக அலபாமாவில் ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்ததாரருடன் பணிபுரிந்தார்.

அனில் வர்ஷ்னி பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றசாட்டு

வர்ஷ்னி ஹன்ட்ஸ்விலி ஏவுகணை பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷனில் மூத்த சிஸ்டம்ஸ் இன்ஜினியராக பணிபுரிந்தார். கடந்த ஆண்டு அக்டோபரில் தனக்கு வேலையில்லாமல் போனதற்கு, பாகுபாடு காட்டப்பட்டது தான் காரணம் என்றும், தான் ரகசிய தகவல் ஏதும் வழங்கவில்லை என்றும் கூறி பெடரல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ளார்.

இறக்கும் நிலையில் இருக்கும் உறவினரிடம் வீடியோ அழைப்பில் பேசிய அனில் வர்ஷ்னி

பாதிக்கப்பட்ட ஊழியர் இந்தியாவில் இறக்கும் நிலையில் இருக்கும் உறவினரிடம் வீடியோ அழைப்பில் ஹிந்தியில் வர்ஷ்னி பேசுவதை சக ஊழியர் கேட்டதாகவும் இதைத் தொடர்ந்து வேலையிலிருந்து நீக்கப்பட்டதாகவும் செய்தி வெளியிட்டது.

இந்தியாவில் இருந்து வந்த உறவினரின் அழைப்பு

செப்டம்பர் 26, 2023 அன்று இந்தியாவில் இருந்து அனில் வர்ஷ்னிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் அவர் இறக்கும் நிலையில் இருந்த அவரது உறவினர் கே.சி. குப்தா தான் இறக்கும் தருவாயில் கடைசியாக வர்ஷ்னியுடன் பேச விரும்பினார். நிலைமையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு பார்க்கையில், வர்ஷ்னி இப்போது குப்தாவிடம் பேசவில்லை என்றால், மீண்டு பேச முடியாது என்ற நிலை இருந்தது. எனவே அனில் வர்ஷினி, மற்றவர்களுக்கு இடையூறு இல்லாத வகையில் ஒதுக்குபுறமான இடத்திற்கு சென்று போனில் பேசினார்.

எந்த ஒரு ரகசிய தகவலையும் அழைப்பில் தெரிவிக்கவில்லை

வர்ஷ்னி பாதுகாப்பு விதிகளை மீறியதாக மற்ற ஊழியர்கள் "தவறாக" புகாரளித்ததாக வழக்கு கூறியது. வர்ஷ்னி தனது வழக்கில் எந்த ஒரு ரகசிய தகவலையும் அந்த அழைப்பில் தெரிவிக்கவில்லை என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, அவர் வீடியோ கால் செய்த இடம் முற்றிலும் காலியாக இருந்தது. அலுவலக பொருட்கள் அல்லது சுவர் தொங்கல்கள் எதுவும் இல்லை, மேலும் ரகசிய தகவல் எதுவும் வழங்கப்படவில்லை என கூறினார்.

ஏவுகணை பாதுகாப்பு நிறுவனம்

மேலும் "தொலைபேசியில் பேசுவதற்கு முன், MDA என்னும் ஏவுகணை பாதுகாப்பு நிறுவனம் (Missile Defense Agency) அல்லது தனிப்பட்ட வேலை தொடர்பான எந்த ஒரு வகைப்படுத்தப்பட்ட பொருள் அல்லது விஷயம் அவர் வசம் இல்லை என்பதை உறுதி செய்தார் எனவும் கூறப்படுகிறது. ஏவுகணை பாதுகாப்பு நிறுவனத்தில் பணி செய்பவர்கள் தொடர்பான விதி முறையை பின்பற்றியே அவர் நடந்துள்ளார் என கூறப்படுகிறது.

மேலும் படிக்க | பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சிறு நம்பிக்கைக்கீற்று! பங்குச்சந்தை காட்டும் அறிகுறி

இரண்டு நிமிடம் ஹிந்தியில் பேசிய அனில் வார்ஷினி

ஜூன் மாதம் அலபாமாவின் வடக்கு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின்படி, மற்றொரு ஊழியர் வர்ஷினியை அணுகி வீடியோ அழைப்பில் இருக்கிறாரா என்று கேட்ட போது இருவரும் சுமார் இரண்டு நிமிடங்கள் இந்தியில் பேசியிருக்கிறார்கள் என்பதை சக ஊழியர் உறுதிப்படுத்தினார். உரையாடலின் போது, "ஃபோன் அழைப்பு அனுமதிக்கப்படவில்லை என்று மற்றொரு ஊழியர் வர்ஷ்னியிடம் கூறிய நிலையில், அவர் உடனடியாக தொலைபேசி அழைப்பை துண்டித்துவிட்டார். அதுதான் குப்தாவுடனான அவரது கடைசி உரையாடல் எனவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஜூலை 30 பாகிஸ்தான் அரசியல் பேரணி தற்கொலை வெடிகுண்டு தாக்குதலுக்கு பொறுப்பேற்றது ISIS

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News