தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி... கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்பு

Thoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 19, 2024, 04:32 PM IST
  • தூத்துக்குடியில் தேர்தல் புறக்கணிப்பு
  • மீன் கழிவுக ஆலைகளை அகற்ற வலியுறுத்தல்
  • கள்ள ஓட்டு போட வந்த கும்பல் சிறைபிடிப்பு
தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி... கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்பு title=

புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் இந்திய நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் நூறுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், பல பகுதிகளில் பொதுமக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அடிப்படை வசதிகள் நிறைவேற்றி கொடுக்காதது, விமான நிலைய விரிவாக்க பணிகளுக்கு எதிர்ப்பு, மீன் கழிவு ஆலைகளை அகற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக தேர்தல் புறகணிப்பு செய்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Actor Vijay: பேண்டேஜ் உடன் வாக்களித்த விஜய்... படப்பிடிப்பில் காயமா?

தூத்துக்குடியில் தேர்தல் புறக்கணிப்பு

தூத்துக்குடி அருகே உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் கிராமத்தின் அருகே உள்ள மீன் கழிவு ஆலைகளை மூடக்கோரி தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று பிற்பகல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் அந்த கிராமத்திற்கு திமுகவினருடன் காரில் சென்றுள்ளார்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிர்ப்பு

 அப்போது அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கிராம மக்கள் அனிதா ராதாகிருஷ்ணன் காரை விட்டு இறங்கவிடாமல், இவ்வளவு நாள் எங்கே போயிருந்தீர்கள்?, இப்போது ஏன் வருகிறீர்கள் எனக் கூறி பேச்சுவார்த்தை வேண்டாம். நாங்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபடத்தான் போகிறோம், பின்வாங்க மாட்டோம் எனக் கூறி விரட்டி அடித்தனர். இதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

கள்ள ஓட்டு போட வந்த மர்ம நபர்கள்

இதைத்தொடர்ந்து பொட்டலூரணி கிராமத்திற்குள் ஸ்கார்பியோ காரில் வந்த ஒரு கும்பல் கள்ள ஓட்டு போட முயன்றுள்ளது. இது குறித்து கிராம மக்கள் புகார் அளித்தனர்.  உடனடியாக அங்கு வந்த காவல்துறையினர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை பிடித்து ஒரு வேனில் அழைத்து சென்றனர். அப்போது கிராம மக்கள் வேனை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதுடன், ஸ்கார்பியோ காரையும் சிறை பிடித்தனர். மேலும் அந்த காரில்  மதுபான பாட்டில்கள் கத்தி, அருவா, கம்பு இருந்ததாக கூறப்படுகிறது. வேன் மற்றும் ஸ்கார்பியோ காரை சுற்றி கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் வேனின் கண்ணாடி உடைக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் காவல்துறையினர் அப்பகுதி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பின்னர் கள்ள ஓட்டு போட வந்தவர்களை அழைத்துச் சென்றனர்.

மேலும் படிக்க | Lok Sabha Elections 2024: தமிழ்நாட்டில் தேர்தலை புறக்கணிக்கும் ‘சில’ கிராமங்கள்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News