மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு கண்டனம்: புதுச்சேரியில் மின் ஊழியர்கள் பேரணி

புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து 1000 -க்கும் மேற்பட்ட மின் ஊழியர்கள் துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி  பேரணி நடத்தினர். 

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Dec 24, 2021, 04:07 PM IST
மின்துறை தனியார் மயமாக்கப்படுவதற்கு கண்டனம்: புதுச்சேரியில் மின் ஊழியர்கள் பேரணி title=

புதுச்சேரி அரசானது மத்திய அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஆதரவாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துகளை கலந்தாலோசிக்காமலும் தன்னிச்சையாக முடிவெடுத்து புதுச்சேரி மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதைக் கண்டித்து, தனியார் மயமாக்கல் நடவடிக்கையை கைவிடும் வரை துணைநிலை ஆளுநர்  மாளிகையை நோக்கி பேரணி நடத்தப்படும் என்று மின்துறை பொறியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தனியார்மய எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி எதிர்ப்பு போராட்டக் குழு தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மின்துறை தலைமை அலுவலகத்திலிருந்து பேரணியாக புறப்பட்டனர். இந்த பேரணி, அண்ணா சாலை, நேரு வீதி, காந்தி வீதி, மிஷன் வீதி, வழியாக துணைநிலை ஆளுநர் மாளிகை நோக்கி சென்றது.

ALSO READ | அம்மா..என்னை மன்னித்துவிடு..நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை! 

இந்த பேரணியில் புதுச்சேரியில் உள்ள நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கிருமாம்பாக்கம், தவளகுப்பம், அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, திருக்கனூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மின் துறைகளில் பணிபுரியும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்தும் தனியார் மயமாக்கலை கைவிடக் கோரியும் கையில் பதாகைகளை ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள்.

இதுகுறித்து போராட்டக்குழு தலைவர் வேல்முருகன் கூறும்போது, “அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளும் கலந்து பேசி அடுத்தகட்ட போராட்டத்திற்கு செல்ல இருக்கிறோம். மத்திய அரசும் புதுவை அரசும் மின் துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையினை திரும்ப பெறும் என்கிற அறிவிப்பு வரும் வரை இந்த போராட்டம் தொடரும்” என்று தெரிவித்தார்.

மேலும் மின் துறை ஊழியர்களின் போராட்டத்திற்கு புதுச்சேரியில் உள்ள அரசு ஊழியர்களின் சங்கங்களின் சம்மேளனத்தினர் 200க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதால் புதுச்சேரியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ALSO READ | தமிழ்நாடு வானிலை ஒரு ரவுண்ட்அப்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News