இந்தியா கூட்டணி ஜெயில் அல்லது பெயில் கூட்டணி-கரூரில் ஜே.பி.நட்டா பேச்சு!

Latest News JP Nadda Karur Campaign : இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது என பா.ஜ.கவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேசியிருக்கிறார். 

Written by - Yuvashree | Last Updated : Apr 7, 2024, 08:45 PM IST
  • நாடாளுமன்ற தேர்தல் 2024 பிரச்சாரம்
  • கரூரில் இன்று ஜேபி நட்டா பிரச்சாரம் மேற்கொண்டார்
  • இந்தியா கூட்டணியின் கொள்கையே ஊழல்தான் என்றார்
இந்தியா கூட்டணி ஜெயில் அல்லது பெயில் கூட்டணி-கரூரில் ஜே.பி.நட்டா பேச்சு! title=

Latest News JP Nadda Karur Campaign : தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதை அடுத்து, பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கரூரில் இன்று பிரச்சாரம் மேற்ற்கொண்டார். இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது எனவே இந்த ஊழலை ஒழிக்க பாரதப் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர நீங்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் தாமரை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் கரூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா பேச்சு. கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் செந்தில்நாதனுக்கு ஜே.பி.நட்டா வாக்குகள் சேகரித்தார்.அவர்,

கரூர் அவர் மக்களிடையே பின்வருமாறு பேசியிருக்கிறார்:

“இந்திய பிரதமர் மோடி மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் இந்தியாவில் அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார். அதன்  அடிப்படையில் 90 சதவீத மொபைல் போன்கள் தற்பொழுது இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆட்டோமொபைல் உற்பத்தியில் அமெரிக்க ஜப்பான் போன்ற நாடுகள் கோலோச்சி வந்த நிலையில் உலக அளவில் இந்தியா ஆட்டோ மொபைல் உற்பத்தியில் மூன்றாவது இடத்தில் உள்ளது. 

மேலும் படிக்க | பாஜக அண்ணாமலை இதற்கு பதில் சொல்ல வேண்டும்! நாம் தமிழர் கட்சி சீமான் கேள்வி!

இந்தியாவில் 10 கோடி பெண்களுக்கு கேஸ் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் 40 லட்சம் தமிழகத்திற்கும்  பெண்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதுபோன்று ஜல்ஜீவன் திட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதில் இந்தியா முழுவதும் 11 கோடியே 40 லட்சம் இணைப்புகளும் தமிழகத்தில் 80 லட்சம் இணைப்புகளும்  வழங்கப்பட்டுள்ளது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தில் இந்தியா முழுவதும் 4 கோடி வீடுகள் கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளது இதில் தமிழகத்தில் 14 லட்சம் வீடுகளும்  கான்கிரீட் வீடுகளாக கட்டப்பட்டுள்ளன” என தொடர்ந்து பாஜக ஆட்சியில் செயல்படுத்திய நலத்திட்டங்களை அடுக்கினார்.

இந்தியா கூட்டணி குறித்து பேச்சு:

இந்தியாவில் இந்தியா கூட்டணி என்று ஒன்று உருவாகியுள்ளது இந்த கூட்டணியின் மொத்த கொள்கையே ஊழல்தான் என்று பேசிய அவர், “தமிழ்நாட்டில் திமுக என்றால் வாரிசு அரசியல். மணி லாட்டரி கட்டப்பஞ்சாயத்து என்பது அர்த்தமாகும் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுமே வாரிசு அரசியலையே முன்னிறுத்தி உள்ளது. இது அந்த கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் பொருந்தும். இதுபோன்று இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கி உள்ளன” என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர் “இந்தியா கூட்டணி என்பது ஒன்று ஜெயில் அல்லது பெயில் என்ற ஊழல் கட்சியாகவே உள்ளது” என்று கூறினார்.

மேலும் படிக்க | பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான 4 கோடி ரூபாய் பணம் சிக்கியது எப்படி? லீக்கான ரகசிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News