மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் திருமுறை திருவிழா!

10 ஆதீனங்கள் கலந்து கொள்ளும் மீனாட்சி அம்மன் கோயில் திருவிழாவில் மத்திய அமைசர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ள உள்ளார்.

Written by - Yuvashree | Last Updated : Dec 13, 2023, 04:23 PM IST
  • விரைவில் திருமுறை திருவிழா நடக்கிறது.
  • இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார்.
  • இத்திருவிழா எப்போது எங்கு நடக்கிறது தெரியுமா?
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொள்ளும் திருமுறை திருவிழா! title=

IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா  மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா 16ம்  தேதி நடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில்  மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் 10 ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வருகின்ற 16ஆம் தேதி IMPA  அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை  நீலாங்கரையில் உள்ள ஆர்.கே சென்டரில் பன்னிரு திருமுறை திருவிழா  மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா நடைபெற உள்ளதாக  பட்டிமன்ற  நடுவர் சுக்கிசிவம் கோவில் நிர்வாகிகள் ஆஷிஷ் சண்டலியா,சுவாமி, கோவில் அறங்காவலர் வாசு,ஜெகதீஷ் உள்ளிட்டோர்  செய்தியாளரிடம் தெரிவித்தனர்...

மேலும் படிக்க | வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டியுள்ளனர்-அப்பாவு!

தொடர்ந்து பேசியவர்கள் திருமுறை திருவிழா நிகழ்ச்சியில் 108  ஓதுவ மூர்த்திகள் திருமுறை இசை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம், நாதஸ்வர இசை, 100 மாணவர்களின் திருமுறை இசை பாடல்,  திருமுறைகளால் அதிகம் நாம்  பயன் பெறுவது பொருளா? அருளா? தலைப்பில் பட்டிமன்றம் பிரபல பட்டிமன்ற தலைவர் சுக்கிசிவம் தலைமையில்  நடைபெற உள்ளதாகவும். இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் காலை 8 மணி முதல் மாலை வரை நடைபெற உள்ளதாகவும்  அனைத்து மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தோடு முதல் முறையாக இந்த முயற்சி மேற்கொள்ள உள்ளதாகவும் இந்த ஆர் கே சென்டரில்  10000 மக்கள் பங்குபெறும் வகையில் அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும்  தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தர உள்ளதாகவும்,  வருகின்ற பக்தர்களுக்கு திருவான்மியூரில் இருந்து பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

Thirumurai

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளதாகவும் அது மட்டுமல்லாமல் திருவாடுதுறை ஆதீனம், தருமபுரம் ஆதீனம், மதுரை ஆதீனம், குன்றக்குடி ஆதீனம், பேரூர் ஆதீனம், மயிலம் பொம்மைபுற  ஆதீனம், சிறவாய் ஆதீனம், செங்கோல் ஆதீனம், துளுவோர் ஆதினம், வேலக்குறிச்சி ஆதீனம் உள்ளிட்ட ஆதீனங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க  உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ஈரோடு: காதல் மனைவி கொலை... கணவனின் நாடகத்தை கண்டுபிடித்த காவல்துறை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News