இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?

IPL Playoffs: ஐபிஎல் 2024 பிளேஆஃப் போட்டிகளுக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தகுதி பெறுமா என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.  

Written by - RK Spark | Last Updated : May 5, 2024, 01:18 PM IST
  • கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்ற ஆர்சிபி.
  • புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.
  • பிளே ஆப்க்கு தகுதி பெற இன்னும் வாய்ப்புள்ளது.
இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா? title=

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024ல் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் இந்த சீசனின் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.  மேலும் பிளேஆஃப்களுக்கு செல்வதற்கான நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்துள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 52வது போட்டியில் குஜராத்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். 148 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்தார், மறுபுறம் விராட் கோலி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். 

மேலும் படிக்க | 20 ஓவர் உலக கோப்பை : இந்த பிளேயர் எந்நேரமும் இந்திய அணியில் இருந்து கழற்றிவிடப்படலாம்!

இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை வைத்து இருந்தார். இந்நிலையில், கோலி 11 போட்டிகளில் 67.75 சராசரியில் 542 ரன்கள் எடுத்துள்ளார். புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற இன்னும் வாய்ப்புள்ளது.  இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 14 புள்ளிகளைப் பெறலாம்.

நல்ல ரன் விகிதத்துடன் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஆர்சிபி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சில போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். இரு அணிகளும் 10 ஆட்டங்களில் 12 புள்ளிகளை பெற்றுள்ளன. மறுபுறம், தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மீதமுள்ள 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது. இதேபோல், பஞ்சாப் கிங்ஸ் 10 ஆட்டங்களில் எட்டு புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களும் மூன்று ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது.

மேலே சொன்ன அனைத்தும் நடந்தால் மொத்தம் ஆறு அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும், பின்னர் நிகர ரன் விகிதம் அடிப்படையில் அணிகள் தகுதி பெரும். ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் தகுதி பெற முடியும், ஆனால் மற்ற அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற கூடாது.  குறிப்பிடத்தக்க வகையில், ஆர்சிபி அவர்களின் IPL 2024 பிரச்சாரத்தை நடப்பு சாம்பியனான சென்னை அணிக்கு எதிரான தோல்வியுடன் தொடங்கியது, பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து, தற்போது கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : ரோகித் மனது வைத்தால் நடராஜனுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு! எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News