இந்த ராசிகளின் தலைவிதி மாறும்: புதனும் சுக்கிரனும் சேர்ந்து அருள் புரிவார்கள்

புதன் சுக்கிரன் இணைப்பு, ராசிகளில் தாக்கம்: ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரே ராசியில் இரண்டு கிரகங்கள் சேர்ந்தால் அது யுதி எனப்படும். ஜூலை 13 அன்று, சுக்கிரன் கிரகம் மிதுன ராசிக்குள் நுழைந்தது. இந்த ராசியில் புதன் கிரகம் ஏற்கனவே அமர்ந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் அனைத்து ராசிக்காரர்களில் வாழ்விலும் அதன் தாக்கம் இருக்கும். 

1 /4

மிதுன ராசியில் புதனும் சுக்கிரனும் இணைந்திருப்பதால் அனைத்து ராசிக்காரர்களில் வாழ்விலும் அதன் தாக்கம் இருக்கும். குறிப்பிடத்தக்க வகையில் சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் அதிக அளவில் பிரகாசிக்கும். அந்த அதிர்ஷ்டக்கார ராசிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

2 /4

புதன் மற்றும் சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல செய்திகளை வழங்கும். புதன், சுக்கிரன் இணைவதால் இந்த ராசியில் மகாராஜ யோகம் உருவாகி வருகிறது. இதன் காரணமாக மிதுன ராசிக்காரர்களுக்கு பல வகைகளில் பண ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் நல்ல பெயர் கிடைக்கும். பணி இடத்தில் ஊதிய உயர்வு பதவி உயர்வு ஏற்படலாம். நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். 

3 /4

கன்னி ராசிக்காரர்களுக்கு புதன் மற்றும் சுக்கிரன் ஆகிய இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் பத்ரா என்ற ராஜயோகம் உருவாகி வருகிறது. இந்த யோகம் வியாபாரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி வருவதற்கான அறிகுறிகள் தென்படும். இந்த ராசியில் புதாதித்ய யோகம் அமைவதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் இப்போது நடந்து முடியும்.

4 /4

மகர ராசிக்காரர்களின் ஜாதகத்தில் இரண்டு ராஜயோகங்கள் உருவாகி வருகின்றன. முதல் ருச்சக் யோகம் மற்றும் இரண்டாவது ஷாஷ் யோகமாகும். இந்த இரண்டு ராஜயோகங்கள் அமைவதால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். அதிர்ஷ்டம் உங்களை ஆதரிக்கும். இது முதலீடு செய்வதற்கு சாதகமான காலம். (பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிபடுத்தவில்லை.)