Astro: செவ்வாய்கிழமையின் அதிர்ஷ்ட ராசிகள்... பலன்களும்... பரிகாரங்களும்!

Lucky Zodiacs: நாளை, ஏப்ரல் 9, செவ்வாய்கிழமை, பங்குனி மாதத்தின் சுக்ல பக்ஷ பிரதமை திதியாகும். ​​லக்ஷ்மி நாராயண யோகம், சர்வார்த்த சித்தி யோகம், அமிர்த சித்தி யோகம், ரேவதி நட்சத்திரம் ஆகிய மூன்றும் இணைந்து உருவாகி வருவதால், இந்த நாளின் முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.

வசந்த நவராத்திரியின் முதல் நாளில் உருவாகும் சுப யோகத்தால் 5 ராசிக்காரர்கள் பலன் அடையப் போவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது. நாளை அதாவது ஏப்ரல் 9 ஆம் தேதி எந்தெந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் என்று தெரிந்து கொள்வோம்.

1 /7

மிதுன ராசி: நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதோடு செல்வாக்கும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும், பிள்ளைகள் தரப்பில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.  தடைபட்ட வேலைகள் நிறைவடையும்.

2 /7

சிம்ம ராசி: துர்க்கை அன்னையின் அருளால், சொத்துக்கள் வாங்கும் விருப்பம் நாளை நிறைவேறும். முதலீடு செய்பவர்களுக்கு நாளை நல்ல லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் உத்தியோகஸ்தர்கள் உங்கள் பணியை பாராட்டுவார்கள். செல்வாக்கும் அதிகரிக்கும். பணம் சம்பாதிக்க புதிய வழிகள் உருவாகும், சமூகத்தில் உங்கள் மரியாதையும் அதிகரிக்கும்.

3 /7

கன்னி ராசி: செல்வம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணியிடத்தில் நீங்கள் செய்த கடின உழைப்பின் பலனை அனுபவிக்கும் நேரம் வந்துவிட்டது.  நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீக ஸ்தலத்திற்குச் செல்லலாம். உங்கள் புத்திசாலித்தனத்தினால் எதிரிகளை எளிதில் வெல்வீர்கள்.

4 /7

மகர ராசி: இந்த ராசிக்காரர்கள் நாளை ஆஞ்சனேயர் அருளால் பொறுமையுடன் முன்னேறி  இலக்கை அடைவார்கள். செல்வாக்கு மிக்கவர்களின் உதவியையும் பெறுவீர்கள். பொருள் வளம் பெருகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவீர்கள். முதலீடு மூலம் நல்ல இலாபம் அடையலாம். குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் பரஸ்பர அன்பு இருக்கும்.

5 /7

கும்ப ராசி: தனவரவுகளால் சேமிப்பு மேம்படும். திட்டமிட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வைப்பீர்கள். தொழில் நிமிர்த்தமான பயணங்கள் சாதகமாகும்.  கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சி உண்டாகும். 

6 /7

துர்க்கைக்கு அர்ச்சனை செய்து அகண்ட தீபம் ஏற்றவும். துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை அணிவிப்பது பலன் தரும். எதிரிகள் மற்றும் இடையூறுகள் விலக, செவ்வாய்கிழமை விரதம் இருப்பது பலன் தரும். அனுமன் சாலிசா பாராயணம் செய்து, அனுமன் மந்திரங்களை உச்சரிக்கவும்.

7 /7

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.