கார்த்திகை தீபம்: வார்னிங் கொடுத்த கார்த்திக்.. பொசசிவ்வான தீபா

Karthigai Deepam Update As on 20th September 2023: வார்னிங் கொடுத்த கார்த்திக்.. பொசசிவ்வான தீபா - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட் 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 20, 2023, 01:41 PM IST
  • கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
  • திருவிழாவில் இரண்டு பெண்கள் கார்த்திக்கை சைட் அடித்தனர்.
  • கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
கார்த்திகை தீபம்: வார்னிங் கொடுத்த கார்த்திக்.. பொசசிவ்வான தீபா title=

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் (Zee Tamil TV) திங்கள் முதல் சனி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இத்தொடர், தற்போது பல எதிர்பாராத விறுவிறுப்பான ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. பலரது மனதை கவர்ந்துள்ள இந்த தொடரில் இன்று பல சுவாரஸ்யமான விஷயங்கள் நடக்க உள்ளன. தமிழ் தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஒளிபரப்பானாலும் ஒரு சிலவற்றை மட்டுமே ரசிகர்கள் விரும்பி பார்க்கின்றனர். அப்படி ரசிகர்கள் பலர் விரும்பி பார்க்கும் சீரியல்களுள் ஒன்று, கார்த்திகை தீபம்.

இந்த தொடர் முதல் எபிசோடில் இருந்து தற்போது வரை பல விருவிருப்பான திருப்பங்களை சந்தித்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் இதில் பல சம்பவங்கள் நடக்க உள்ளன. அவை என்னென்ன என்பதை பார்க்கலாமா..?  இந்த சீரியல் நேற்றைய எபிசோட்டில் குணா ஆசிட் கலந்த பானையை உரியடிக்க வைக்க இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, தீபா உறியடிக்க எதுவும் ஆகாமல் இருக்க பிறகு அந்த பானையில் ஆசிட் இல்லை என தெரிய வந்தது குணா தன்னுடைய அடியாட்களிடம் விசாரித்துக் கொண்டிருக்க கார்த்திக் யானையை மாற்றி வைத்த விஷயத்தை சொல்லி அவர்களை எச்சரிக்கிறார். இதையெல்லாம் மறைந்திருந்து ஒட்டு கேட்கும் ஐஸ்வர்யா பிறகு அங்கிருந்து கிளம்பி சென்று விடுகிறார். 

மேலும் படிக்க | என்னை ஏற்றுக் கொள் என கெஞ்சும் கார்த்திக்! முடிவு என்னிடம் இல்லை யமுனா பதில்

அடுத்ததாக திருவிழாவில் இரண்டு பெண்கள் கார்த்திக்கை சைட் அடித்த அவனோடு செல்பி எடுக்க அதை பார்த்த தீபா கடுப்பாகி கார்த்திகை அப்பா கூப்பிடுவதாக சொல்லி அனுப்பி வைத்துவிட்டு அந்த பெண்களிடம் கார்த்தியோட பொண்டாட்டி பெரிய பஜாரி என்று பேசி மிரட்டி அந்த செல்பி போட்டோவை டெலிட் செய்ய வைக்கிறாள். 

அதனைத் தொடர்ந்து கார்த்தி வீட்டுக்கு வந்ததும் தீபா அவனுக்கு திருஷ்டி கழிக்க கற்பூர ஆரத்தி காட்ட மைதிலி அதை பார்த்து விடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. ரசிகர்களின் மனங்களில் மிகவும் நல்ல இடத்தை இத்தொடர் பிடித்துள்ளது. 

மேலும் படிக்க | தமிழா தமிழா மேடையை மிரள வைத்த சிறுவன்! வைரலாகும் புதிய ப்ரமோ!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News