கார்த்திகை தீபம்: கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.. ஆப்பு வைக்க புது பிளான் போட்ட ஆனந்த்

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 4, 2024, 03:04 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • கார்த்திகை தீபம் சனி மற்றும் ஞாயிறு தின எபிசோட் அப்டேட்.
  • கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.
கார்த்திகை தீபம்: கார்த்திக்காக முருங்கை மரத்தையே கொண்டு வந்த தீபா.. ஆப்பு வைக்க புது பிளான் போட்ட ஆனந்த் title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் ‌ கார்த்தியை வேற ஒரு ஆபீஸ் அனுப்ப பிளான் செய்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

மேலும் படிக்க | த்ரிஷா இதுவரை சந்தித்த சர்ச்சைகள்! அதுக்குன்னு இவ்வளவா...

அதாவது ஆனந்த் ரம்யா ஒரு லேடி ஹிட்லர் கார்த்தியை அவ கம்பெனிக்கு அனுப்பினா கண்டிப்பா கஷ்டப்படுவான் என்று சொல்லி ரம்யாவுக்கு போன் போட்டு எனக்கு தெரிஞ்ச ஒருத்தனை அனுப்பி வைக்கிறேன். அவனுக்கு உன் கம்பெனில வேலையை கொடு என்று சொல்கிறான்‌. ரம்யா நீயே கம்பெனி வச்சிட்டு தான இருக்க இங்க கொடுக்கலாமே என்று கேட்க இப்போதைக்கு இந்த ஆள் தேவைப்படல என்று சொல்கிறான். 

மேலும் அவன் தப்பு பண்ணா நான் ரெகமெண்ட் ஆளு என்றெல்லாம் பார்க்க வேண்டாம் வேலையை விட்டு அனுப்பிடு என்று சொல்லி ஃபோனை வைக்கிறான். மார்க்கெட் சென்று வந்த தீபா முருங்கக்காய் முருங்கைப்பூ என அனைத்தும் முருங்கை ஐட்டமாக வாங்கிட்டு வர மீனாட்சி மைதிலி அவளை கலாய்கின்றனர். 

அபிராமி வந்து என்ன சமையல் என்று கேட்க எல்லாம் தீபா முருங்கைக்காய் அழுத்தமா சமைக்கிற என்று சொல்ல அபிராமி உடம்புக்கு நல்லது தானே கல்யாணமான புதுசுல நானும் இப்படி தான் சமைச்சு கொடுத்தேன் என்று சொல்ல அபிராமியையும் சேர்த்து கலாய்க்கின்றனர்.  ‌

அதன் பிறகு கார்த்திக் ஆபீஸ் கிளம்பி வரேன் ஆனந்த் அவனை கூப்பிட்டு நீ நம்ப ஆபீஸ்க்கு வர வேண்டாம், வேற ஒரு ஆபீஸோட அட்ரஸ் கொடுக்கிறேன் எங்க போ என்று சொல்ல கார்த்தி உங்களுக்கு என்னைய இடம் மாத்திக்கிட்டே இருக்கிறதே வேலையை போச்சு என்று சொல்லி சரி குடுங்க என்று ரம்யா கம்பெனிக்கு கிளம்பி செல்கிறான். 

மறுபக்கம் தண்ணீர் பிடித்த ஒரு பெண் தவறுதலாக வந்து ரம்யா மீது மோதிவிட அந்த ரம்யா அந்தப் பெண்ணிடம் சண்டை போடுகிறார். அந்தப் பெண்ணோ உங்கமேல தப்பு என்று சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | HBD Trisha: கோடிகளில் புரளும் கோலிவுட் குயின் த்ரிஷா.. சொத்து மதிப்பு இத்தனையா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News