கார்த்திகை தீபம் அப்டேட்: ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி

Karthigai Deepam Today's Episode Update: ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினந்தோறும் இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 2, 2024, 02:53 PM IST
  • கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்.
  • பரிகாரம் செய்ய மறுக்கும் ரியா.
  • தீபாவை பாட்டு வாட வைக்கும் கார்த்திக்.
கார்த்திகை தீபம் அப்டேட்:  ரியாவை சிக்க வைத்த தீபா.. ஆனந்த் கொடுத்த அதிர்ச்சி title=

தொலைக்காட்சி சீரியல்கள் நம் பலரது வாழ்வோடு பின்னிப்பிணைந்து இருக்கும் அம்சமாக உள்ளன. தினசரி தொடராக வரும் டிவி சீரியல்களுக்கும், அவற்றில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் சினிமா பிரபலங்களையே மிஞ்சும் அளவுக்கு கூட ரசிகர் பட்டாளம் உள்ளது. அப்படி பல ரசிகர்கள் விரும்பி பார்க்கும் சீரியல்களில் ஒன்றுதான் ‘கார்த்திகை தீபம்’ சீரியல்.

கார்த்திகை தீபம் : இன்றைய எபிசோட்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட அபிராமி பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, வீட்டிற்கு வரும் ஜோசியர் ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கு, அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் பண்ணனும் என்று சொல்லி செல்ல ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும் தீபா அபிராமியிடம் அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள். 

பரிகாரம் செய்ய மறுக்கும் ரியா

அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்ல அவள் என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்கிறாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுத்து விடுகிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொல்கிறாள். 

இதனை தொடர்ந்து ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க வேறு வழியின்றி ரியா ஒப்பு கொள்கிறாள். அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத ஆனந்த் கோவிலுக்கு எல்லாம் வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். 

தீபாவை பாட்டு வாட வைக்கும் கார்த்திக்

அடுத்து தீபா கார்த்திக்கு சாப்பாடு கொண்டு வர சிம்பிளாக வந்த அவளை பார்த்து செக்யூரிட்டி கார்த்திக் மனைவின்னு நம்ப முடியாமல் உள்ளே விட மறுக்க அருண் இதை பார்த்து தீபாவை உள்ளே அழைத்து செல்கிறான், அடுத்து கார்த்திக் எல்லாருக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்து அவளை பாட்டு பாடவும் வைக்கிறான்.

மேலும் படிக்க | பவன் கல்யாணின் 'ஹரி ஹரா வீர மல்லு’ படத்தின் டீசர் வெளியானது!

அதே போல் கோவிலுக்கு வந்த ரியா கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல தீபா ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள். இதனால் ரியா சிக்கி கொள்ள அவளை அங்கபிரதர்சனம் செய்ய வைத்து கையில் தீ சட்டியை கொடுக்க ரியா சூடு தாங்காமல் தவிக்கிறாள். 

காணத்தவறாதீர்கள்

இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.

கார்த்திகை தீபம்: சீரியலை எங்கு பார்ப்பது?

கார்த்திகை தீபம் சீரியல் 2022 ஆம் ஆண்டு முதல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது தவிர, டிஜிட்டல் தளமான ZEE5 -லும் இது ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றது. 

மேலும் படிக்க | சின்னத்திரையில் களமிறங்கும் வடிவேலு!? எந்த நிகழ்ச்சி தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News