விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சத்தை பெறுங்கள்

Post Office Scheme: போஸ்ட் ஆபீஸ் கிராம பாதுகாப்பு திட்டம் மிகவும் பிரபலமான திட்டமாகும். இதில் நீங்கள் 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்து, அதற்கு ஈடாக சிறந்த வருமானத்தை பெறலாம்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 12, 2023, 09:03 PM IST
  • கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தின் முழு விவரம்.
  • கிராம பாதுகாப்பு திட்டத்தின் பலனை எவ்வாறு பெறுவது.
விவசாயிகளுக்கு நற்செய்தி! ரூ.50 முதலீடு செய்து ரூ.35 லட்சத்தை பெறுங்கள் title=

கிராம சுரக்ஷா யோஜனா: தபால் அலுவலகம் பல புதிய திட்டங்களைக் கொண்டு வருகிறது, மேலும் அதன் பெரும்பாலான திட்டங்கள் மக்களுக்கு நல்ல லாபத்தை அளிப்பதால் மக்களால் அதிகம் விரும்பப்படுகின்றன. அத்தகைய தபால் அலுவலகத்தின் சிறப்புத் திட்டத்தைப் பற்றி இன்று நாம் காண உள்ளோம். குறிப்பாக கிராம மக்களுக்காக இந்த திட்டம் பயம் தரும். அதன் பெயர் தபால் அலுவலக கிராம பாதுகாப்பு திட்டமாகும். இந்த திட்டம் மிகவும் பிரபலமானது. இதில், கிராமப்புற மக்கள் பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் பயனடைவார்கள். இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இதில் நீங்கள் தினமும் 50 ரூபாய் மட்டுமே முதலீடு செய்ய வேண்டும், அதில் உங்களுக்கு சிறப்பான வருமானம் கிடைக்கும்.

கிராம பாதுகாப்பு திட்டத்தின் பலனை எவ்வாறு பெறுவது
இதில் தினமும் ரூ.50 அதாவது மாதம் ரூ.1500 முதலீடு செய்ய வேண்டும். அதன் பிறகு இந்தத் திட்டத்தில் 31 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும். முதலீட்டாளர் 80 வயதில் இறந்துவிட்டால், அவரது நாமினிக்கு போனஸுடன் முழுத் தொகையும் கிடைக்கும்.

மேலும் படிக்க | ரேஷன் கார்டு இல்லாமல் பொருள் வாங்கலாம்; தமிழக அரசின் குட் நியூஸ்

யார் முதலீடு செய்யலாம்?
19 வயது முதல் 55 வயது வரை உள்ள இந்திய குடிமக்கள் அனைவரும் கிராம பாதுகாப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். குறைந்தது ரூ.1,000 முதல் ரூ.10 லட்சம் வரை இதில் முதலீடு செய்யலாம். பிரீமியம் செலுத்துவதற்கு பல விருப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்கள் மாதாந்திர, காலாண்டு, அரையாண்டு அல்லது ஆண்டு அடிப்படையில் தவணை செலுத்தலாம்.

எப்போது பணம் கிடைக்கும்?
முதலீட்டாளர் 55 ஆண்டுகளில் ரூ.31,60,000 கிடைக்கும். 58ல் ரூ.33,40,000 மற்றும் 60 ஆண்டுகளில் ரூ.34.60 லட்சமும், 80 ஆண்டுகள் நிறைவடைந்தவுடன் முழுத் தொகையும் பெறுவார்கள்.

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு லோன் கிடைக்கும்
கிராம சுரக்ஷா பாலிசியை வாங்கிய பிறகும் நீங்கள் லோனை பெறலாம். பாலிசி வாங்கிய நாளிலிருந்து 4 ஆண்டுகளுக்குப் பிறகு லோன் பெறலாம். இது தவிர, பாலிசி காலத்தில் பிரீமியத்தை செலுத்துவதில் ஏதேனும் தவறு இருந்தால், நிலுவையில் உள்ள பிரீமியம் தொகையை செலுத்தி மீண்டும் தொடங்கலாம்.

மேலும் படிக்க | திருப்பதி: அங்கப்பிரதட்சணம் செய்ய ஆன்லைன் டிக்கெட் ரிலீஸ்..! உடனே புக் பண்ணுங்க

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News