காரசார வாதம்.. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு.. கிடைக்குமா ஜாமீன்? உச்சநீதிமன்றம் பரிசீலனை

Arvind Kejriwal Bail: சிறையில் இருந்து வெளியே வருவாரா டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். அமலாக்கத் துறையிடம் கேள்வி மேல் கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம்.

Written by - Shiva Murugesan | Last Updated : May 7, 2024, 01:23 PM IST
காரசார வாதம்.. அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு.. கிடைக்குமா ஜாமீன்? உச்சநீதிமன்றம் பரிசீலனை title=

Arvind Kejriwal News: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை பிஎம்எல்ஏ பிரிவு 19ன் கீழ் கைது செய்தது எப்படி நியாயமானது என்பதை தெளிவுபடுத்துமாறு அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் கேட்டுள்ளது. டெல்லி மதுபான கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை அமலாக்கத் துறை கைது செய்தது. தற்போது அவர் நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். 

தன்னை கைது செய்ததை எதிர்த்து அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவை, டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தற்போது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அப்பொழுது அமலாக்கத்துறை சார்பில் ஆஜாரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு தங்கள் வாதங்களை முன்வைத்தார்.

அப்பொழுது ஹவாலா ஆபரேட்டர் மூலம் ரூ.100 கோடி பரிவர்த்தனை நடந்துள்ளதாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு கூறினார். இதில் 1100 கோடி சம்மந்தப்பட்டு உள்ளது என்றார். இதற்கு நீதிபதி இந்த வழக்கில் குற்றம் மூலம் கிடைத்த வருமானம் ரூ.100 கோடி, அப்படியானால் இந்த ரூ.1100 கோடி எங்கிருந்து வந்தது என்று கேட்டார். 

இதற்கு பதிலளித்த ஏஎஸ்ஜி ராஜூ, புதிய மதுபான பாலிசியால் மதுபான நிறுவனங்கள் அடைந்த லாபமும் இதில் அடங்கும். என்றார்.  லாபம் முழுவதையும் குற்றத்தின் மூலம் ஈட்டப்பட்ட வருமானமாக கருத முடியாது என்று நீதிமன்றம் கூறியது. 

இந்த வழக்கில் PMLA இன் பிரிவு 19 பின்பற்றப்பட்டதா என்பது தான் முன் உள்ள கேள்வி என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது இந்த பிரிவின் கீழ் தேவையான அளவுகோல்களை பூர்த்தி செய்கிறதா? எனக் கேள்வி எழுப்பியது.

PMLAவின் 19வது பிரிவின் கீழ் கெஜ்ரிவாலின் கைது எப்படி நியாயமானது என்பதை நீங்கள் எங்களுக்கு முன் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. ‘குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என்று நம்புவது’ என்ற இந்தப் பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான காரணமும், கைது செய்யப்பட்டதற்கான காரணமும் வேறுவிதமாக இருக்கலாம் என்ற உங்கள் வாதம் சரியல்ல என்று நீதிமன்றம் கூறியது. கைது செய்யும்போது/ரிமாண்ட் எடுக்கும்போது, ​​அது ஏன் தேவைப்படுகிறது என்பதை நிரூபிப்பது அமலாக்கத் துறையின் பொறுப்பு என்றது.

மேலும் படிக்க - சிறையில் இருக்கும் கெஜ்ரிவாலை அவரது மனைவி ஏன் சந்திக்க முடியவில்லை?

குற்றம் சாட்டப்பட்ட எவருக்கும் எதிரான உண்மைகள்/ஆதாரங்கள் அடிப்படையில் நீங்கள் அவர்களை குற்றவாளி எனபதை முடிவு முடியாது என்று நீதிபதி தீபங்கர் தத்தா ஈடியிடம் கூறினார். மொத்தத்தில் கிடைக்கக்கூடிய அனைத்து உண்மைகளையும் நீங்கள் பார்க்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு (கெஜ்ரிவால்) எதிரான உண்மைகளை நீங்கள் புறக்கணிக்க முடியாது. கைது செய்யும்போது, ​​பிரிவு 21ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டவரின் சுதந்திரத்தைப் பறிக்கிறீர்கள். இந்த விஷயத்தில், நீங்கள் ஒரு சமநிலையான அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது.

அரவிந்த் கெஜ்ரிவாலின் இடைக்கால ஜாமீன் மீதான வாதங்களை மதியம் 12.30 மணி முதல் விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையை மத்திய அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்த்தார். கெஜ்ரிவாலின் அரசியல் அந்தஸ்து காரணமாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக அவருக்கு ஜாமீன் வழங்குவதன் மூலம் மற்றவர்களிடமிருந்து வேறுபட்ட சலுகையை இவருக்கு மட்டும் வழங்க முடியாது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படும். அரவிந்த் கெஜ்ரிவால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். தற்போது டெல்லியில் தேர்தல் நடக்கிறது. அவர் பிரசாரம் செய்ய வேண்டியுள்ளது என்று நீதிபதி கன்னா கூறினார். 

இது குறித்து மேத்தா கூறுகையில், அவர் (கெஜ்ரிவால்) ஒத்துழைத்திருந்தால் ஒருவேளை கைது செய்யப்பட்டிருக்க மாட்டார். இப்போது பிரச்சாரம் செய்ய விரும்புகிறேன் என்று சொல்கிறார்கள்.

கெஜ்ரிவால் வழக்கமான குற்றவாளி அல்ல என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுவே ஒரு அசாதாரண வழக்கு. அவர் டெல்லி முதல்வர். இடைக்கால ஜாமீன் வழங்கலாமா என்பது குறித்து பரிசீலிப்போம். இது குறித்து உங்கள் வாதங்களை முன்வைக்கிறீர்கள். எஸ்.ஜி.மேத்தா, 'இது நடந்தால், ஒரு குற்றவாளி விளம்பரத்திற்காக ஜாமீன் பெறுகிறார் என்ற தவறான செய்தியை அனுப்பும்! கெஜ்ரிவால் 9 சம்மன்களை புறக்கணித்ததை நாங்கள் புரிந்துகொள்கிறோம் என்று நீதிமன்றம் கூறியது. உங்கள் எதிர்ப்பை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இடைக்கால ஜாமீனில் உங்கள் வாதங்களை முன்வைக்கிறீர்கள்.

இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் பங்கையும் நீதிமன்றம் ஆராய வேண்டும் என்று எஸ்ஜி துஷார் மேத்தா கூறினார். தேர்தல் பிரச்சாரத்தில் அவர் தனியாக இல்லை. அவர் பிரச்சாரம் செய்யாவிட்டால் வானம் இடிந்துவிடாது. சாமானியனுக்கு கிடைக்காத நிவாரணம் அரசியல்வாதிக்கு எப்படி கிடைக்கும்?

கைது செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மனுவை விசாரித்து தீர்ப்பை ஒத்திவைத்து பின்னர் முடிவெடுத்தால், அதற்குள் தேர்தல் முடிந்துவிடும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற அசாதாரண சூழ்நிலைகளில், இடைக்கால ஜாமீனும் வழங்குகிறோம்.

மேலும் படிக்க - 10 நாள்களில் 4.5 கிலோ எடை குறைந்த அரவிந்த் கெஜ்ரிவால்... திஹார் ஜெயிலின் பதில் என்ன?

இப்போது உச்ச நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை முன்வைக்கிறார். அவர், 'ஒடிசாவின் சிவசங்கர் தாஸின் வழக்கைப் பாருங்கள். பிரசாரம் செய்யக்கூடாது என்ற நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கப்பட்டது. அந்த நிபந்தனையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. அதன்பிறகு சந்திரபாபு நாயுடு வழக்கில் பத்திரிகை பேட்டிகள் கொடுக்கலாம் என்று கூறப்பட்டது. இந்நிலையில், கெஜ்ரிவாலை சிறையில் அடைப்பதற்கு பதிலாக, டில்லியை சிறையில் அடைக்க நினைக்கின்றனர்.

நீதிபதி கன்னா, கெஜ்ரிவாலின் வழக்கறிஞரிடம், 'நாங்கள் உங்களை விடுவித்து, நீங்கள் தேர்தலில் பங்கேற்க அனுமதிக்கப்படுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அதே நேரத்தில் உங்களது அரசு கடமைகளையும் செய்வீர்கள் அது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் தானே? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

ஒட்டுமொத்த நாடும் தன்னை கவனித்துக் கொண்டிருக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே இந்த வழக்கில் தான் எதுவும் குறிக்கிடாமல் இருந்து வருவதாக அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம் செய்தனர். 

உங்களை விடுவித்தால் அதன் மூலமாக நீங்கள் அரசு வேலைகளை செய்வதை நாங்கள் விரும்பவில்லை என நீதிபதி கன்னா கூறினார்.

நாட்டில் தேர்தல் நடக்கவில்லை என்றால் இடைக்கால ஜாமீன் என்ற கேள்வி எழுந்திருக்காது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

நான் (கெஜ்ரிவால்) எந்த கோப்பிலும் கையெழுத்திட மாட்டேன் என்று அறிக்கை அளிப்பேன் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம்.

இதுகுறித்து எஸ்.ஜி.மேத்தா கூறுகையில், கெஜ்ரிவால் எந்த கோப்பிலும் முன்கூட்டியே கையெழுத்திடுவதில்லை என்றார். அதற்கு சிங்வி, 'கோப்பில் நான் கையெழுத்திடாமல் அரசு எப்படி இயங்க முடியும்? நான் தினமும் 10 கோப்புகளில் கையொப்பமிட்டு வணிக விதிகளின் பரிவர்த்தனைகளை கவனித்து வருகிறேன் என்றார்.

ஜார்ஜ் பெர்னாண்டஸ் சிறையில் இருந்து தேர்தலில் போட்டியிட்டு, இந்தியத் தேர்தல்களிலேயே மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று உச்ச நீதிமன்றம் கூறியது.

அதற்கு எஸ்.ஜி.மேத்தா, 'சிறையில் இருக்கிறார், அவர் தனது உரிமைகளை விட்டுக்கொடுக்க வேண்டும். எம்எல்ஏவாகவோ அல்லது தலைவராகவோ அவருக்கு என்ன உரிமை இருந்தாலும். துறை இல்லாமல் அமைச்சராக இருப்பது மரியாதைக்குரிய விஷயமல்ல. அவர் அரசியல்வாதி என்பதற்காக அவரை விடுவிப்பது சரியான உதாரணம் அல்ல என்று வாதம் செய்தார். 

இடைக்கால ஜாமீன் விவகாரத்தில் இரு தரப்பு வாதங்களையும் கேட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தேர்தல் நேரம் என்பதால் இடைக்கால ஜாமீன் வழங்குவது குறித்து பரிசீலிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க - மதுபான கொள்கை முறைகேடு வழக்கு.. டெல்லி திஹார் சிறையில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News