கரும்புச் சாறு: கோடையில் குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

கோடைகாலம் தொடங்கிவிட்டதால் உடலுக்கு குளிர்ச்சியான ஜூஸ் எடுத்துக் கொள்வது அவசியம். குறிப்பாக கருப்பும்சாறு குடித்தால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 30, 2023, 10:49 AM IST
கரும்புச் சாறு: கோடையில் குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் title=

சர்க்கரை உற்பத்திக்கு பயன்படும் கரும்பில் ஏராளமான ஆரோக்கியமான நன்மைகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் சர்க்கரையில் 70 விழுக்காடு கரும்பில் இருந்தும், 30 விழுக்காடு சக்கரவள்ளிக் கிழங்கில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவை பொறுத்தவரை உலகளவில் கரும்பு உற்பத்தியில் பிரேசிலுக்கு அடுத்தபடியாக 2வது இடத்தில் இருக்கிறது. கரும்பில் இருந்து சர்க்கரை மட்டுமல்லாமல் வெல்லம் உள்ளிட்டவை கூட தயாரிக்கப்படுகின்றன. 

36 வகையான கரும்பு இருக்கும் நிலையில், இதில் இருந்து தயாரிக்கப்படும் சாறு 100 விழுக்காடு இயற்கை பானமாகும். கோடைகாலம் தொடங்கிவிட்ட நிலையில் கரும்பு மற்றும் கரும்புச்சாறு குடிப்பதன் அவசியத்தை தெரிந்து கொள்வோம். பற்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது முதல் உடலுக்கு தேவையான நார்ச்சத்துகளை கொடுப்பது வரை என எண்ணற்ற பலன்கள் கரும்பில் இருக்கிறது.

மேலும் படிக்க | கட்டுப்பாடற்ற ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் டிப்ஸ்! நீரிழிவு அறிகுறிகள்!

கோடையில் கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் 6 நன்மைகள்:

* கரும்பில் இருக்கும் சர்க்கரை, ஃபிளேவோன்களுடன் இணைந்து, கிளைகோசைடுகளை உருவாக்குகிறது. இது நம் உடலில் கார மற்றும் அழற்சி எதிர்ப்பு விளைவுகளை ஏற்படுத்துகிறது. இது நமது கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை ஆதரிப்பதன் மூலம் நச்சுகளை அகற்ற உதவுகிறது.

* கரும்பு சாறு உங்கள் கல்லீரலை வலுப்படுத்த ஒரு வரப்பிரசாதம் மற்றும் மஞ்சள் காமாலைக்கு நிரூபிக்கப்பட்ட தீர்வாகும். கரும்புச் சாற்றில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கல்லீரலை நோய்த்தொற்றுக்கு எதிராகப் பாதுகாத்து பிலிரூபின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன.

* கரும்பில் உள்ள சுக்ரோஸின் இயற்கையான சப்ளை உங்கள் உடலுக்கு சரியான அளவு ஆற்றலை அளிக்கிறது.

* மிக முக்கியமான ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்களில் ஒன்று கரும்பில் உள்ள கிளைகோலிக் அமிலம், இது சருமத்தின் பிரகாசத்தை பராமரிக்க உதவுகிறது.

* ஒரு டம்ளர் கரும்புச் சாற்றுடன் ஒரு துளி இஞ்சி சேர்த்துக் குடித்து வந்தால், கர்ப்பிணிப் பெண்களின் சுகவீனம் குறையும்.

* கரும்புச் சாறு கால்சியம், மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த ஆதாரமாக உள்ளது. வழக்கமான நுகர்வு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தாதுப் பற்றாக்குறையைத் தடுக்கவும் உதவும்.

* கரும்பு சாறு பல நன்மைகளைக் கொண்டிருந்தாலும், சாற்றை பிரித்தெடுத்தவுடன் உட்கொள்வதும் முக்கியம், ஏனெனில் அது 15 நிமிடங்களுக்குள் ஆக்ஸிஜனேற்றப்படும்.

மேலும் படிக்க | உடல் எடை டக்கென்று கூடிவிட்டதா... இதெல்லாம்தான் காரணம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News