Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக்’ டிரிங்க்!

ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், உடல் எடையை குறைக்க உதவும் பானம் குறித்து கூறியுள்ளார்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Aug 14, 2022, 10:52 AM IST
  • உடல் பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • உலர் திராட்சையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்.
  • உலர் திராட்சை ஊற வைத்த நீரின் நன்மைகள்.
Belly Fat: தொப்பையை வெண்ணெய் போல் கரைக்கும் ‘மேஜிக்’ டிரிங்க்! title=

எடை அதிகரிப்பது ஒரு நோயல்ல. ஆனால் அதன் காரணமாக அதிக கொழுப்பு, உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, மாரடைப்பு, பக்கவாதம், இதய தமனி நோய்  உட்பட பல ஆபத்தான பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் இதைத் தவிர்க்க உடல் பருமனை குறைக்கும் வகையிலான உணவுகளையும் பானங்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஜிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பிரபல டயட்டீஷியன் டாக்டர் ஆயுஷி யாதவ், தினமும் உணவில் திராட்சையை பிரத்யேகமான முறையில் சேர்த்துக் கொண்டால், உடல் எடையை குறைப்பது மிகவும் எளிது என்று கூறியுள்ளார்.

உலர் திராட்சையில் காணப்படும் ஊட்டச்சத்துக்கள்

உலர் திராட்சையில் இரும்பு, கால்சியம் நார் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, பொதுவாக இந்த உலர் பழம் பல இனிப்பு உணவுகளில் சேர்க்கப்படுகிறது. நீங்கள் இதனை அப்படியே சாப்பிடலாம், ஆனால் அதன் தண்ணீரை ஊறவைத்து குடித்தால், அது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது என்பதோடு  பல விதமான நோய்களிலிருந்தும் உங்களை காக்கிறது.
 
உலர் திராட்சை ஊற வைத்த நீரின் நன்மைகள்

1. உடல் பருமன்

திராட்சை ஊற வைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நீங்கள் அறிந்தால், நீங்கள் அதை தொடர்ந்து உட்கொள்ளத் தொடங்குவீர்கள். இது உடல் நச்சுகளை குறைக்க உதவுகிறது மற்றும் அதிகரித்து வரும் எடையை சிறப்பாக கட்டுப்படுத்துகிறது.

மேலும் படிக்க | Brain Health: மூளையை பாதிக்கும் ஆபத்தான பழக்கங்களுக்கு ‘NO’ சொல்லுங்க

2. மலச்சிக்கல்

திராட்சை நார்ச்சத்து நிறைந்த உலர்ந்த பழம், எனவே இது வயிற்றுக்கு நல்லது, செரிமான பிரச்சனையை நீக்குகிறது, இதன் காரணமாக உடல் எடை  அதிகரிக்காது.

3. நோய் எதிர்ப்பு சக்தி

வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் திராட்சைப்பழத்தில் காணப்படுகின்றன, இதன் காரணமாக நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கத் தொடங்குகிறது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது, ​​நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் தொடர்ந்து கவனம் செலுத்தப்பட்டது. ஏனெனில் இது நோய்த்தொற்றின் அபாயத்தைக் குறைக்கிறது.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுபேற்காது.)

மேலும் படிக்க | Health Tips: மூளை வளர்ச்சிக்கு உதவும் 'Vitamin B12' நிறைந்த சில உணவுகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News