மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: அதிரடி ஊதிய உயர்வுடன் வரும் அடுத்த சம்பள கமிஷன்

8th Pay Commission: ஜனவரி 2023 -இலும் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 24, 2023, 04:28 PM IST
  • அடுத்த வருடம் ஊழியர்களுக்கு பரிசு கிடைக்கக்கூடும்.
  • முதல் காரணம்: அகவிலைப்படி ஐம்பது சதவீதத்தை எட்டும்.
  • இரண்டாவது காரணம்: பொதுத்தேர்தல்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு: அதிரடி ஊதிய உயர்வுடன் வரும் அடுத்த சம்பள கமிஷன் title=

8வது ஊதியக்குழு, சமீபத்திய புதுப்பிப்பு: புதிய சம்பள கமிஷனுக்கான கோரிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது. எட்டாவது ஊதியக் குழுவை விரைவில் அமல்படுத்த வேண்டும் என்று அரசுக்கு அழுத்தம் கொடுக்க ஊழியர் அமைப்புகள் முயற்சித்து வருகின்றன. எனினும், அரசாங்கம் இதுவரை இதனை பற்றி இந்த வித தெளிவான பதிலையும் இன்னும் அளிக்கவில்லை. ஆனால், அடுத்த ஆண்டு அரசு 8வது ஊதியக்கமிஷனை அமைக்கும் என்றும் அதற்கான சாத்தியக்கூறுகள் உருவாகியுள்ளன என்றும் அரசியல் வல்லுனர்கள் கூறி வருகிறார்கள். அதை பற்றி இந்த பதிவில் காணலாம்.

8th Pay Commission: அடுத்த வருடம் ஊழியர்களுக்கு பரிசு கிடைக்கக்கூடும்

சம்பள கமிஷன் வரும்போது மத்திய ஊழியர்களின் (Central Government Employees) குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் மாறுகிறது. அடுத்த ஊதியக் குழுவை அமைக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை என நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி தெளிவுபடுத்தினார். அத்தகைய முன்மொழிவு எதையும் அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று அவர் கூறினார். ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு தனி திட்டம் வகுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு மனதில் வைத்துள்ளது. அடுத்த ஆண்டு ஊழியர்களுக்கு அரசு இந்த பரிசை வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு இரண்டு காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்: அகவிலைப்படி ஐம்பது சதவீதத்தை எட்டும்

அரசாங்கம் அகவிலைப்படியை (Dearness Allowance) திருத்துவதற்கான விதிகளை மாற்றி ஏழாவது ஊதியக் குழுவை உருவாக்கியது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளின் படி, அகவிலைப்படி 50 சதவீதத்தை (50% DA) அடையும் போது அது பூஜ்ஜியமாக்கப்பட்டு, அந்த தொகை ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்படும். அதன் பிறகு அகவிபைப்படியில் மீண்டும் 1%, 2% என்ற வகையில் அதிகரிப்பு ஏற்படும். 

மேலும் படிக்க | குறைந்த வட்டியில் கடன் வாங்கணுமா... CIBIL ஸ்கோரை அதிகரிக்க செய்ய வேண்டியவை!

ஜூலை 2023-க்கான அகவிலைப்படி 4% உயர்த்தப்பட்டு, மொத்த அகவிலைப்படி 46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. ஜனவரி 2023 -இலும் அகவிலைபப்டி 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், மொத்த அகவிலைப்படி 50 சதவிகிதத்தை எட்டும். அந்த நிலையில், ஊதிய திருத்தம் செய்யப்பட வேண்டும். ஊதிய திருத்தம் செய்ய வேண்டுமானால், புதிய ஊதிய குழு அமைக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

இரண்டாவது காரணம்: பொதுத்தேர்தல் 

ஏழாவது ஊதியக் குழு (7th Pay commission) 2013ல் அமைக்கப்பட்டது. அதன் பின்னர் அதன்  பரிந்துரைகளை அமல்படுத்த மூன்று ஆண்டுகள் ஆனது. ஆகையால் தற்போது அடுத்த ஊதியக்குழு அமைக்கப்பட்டால்தான், 3 ஆண்டுகளுக்கு பிறகு அதை அமல்படுத்த முடியும், அத்தகைய சூழ்நிலையில், அதன் உருவாக்கத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என ஊழியர் சங்கங்கள் கருதுகின்றன. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசு அடுத்த ஆண்டின் துவக்கத்தில் 8வது ஊதிய கமிஷனுக்கான (8th Pay Commission) அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசு ஊழியர்களை மகிழ்விக்கலாம் என கூறப்படுகின்றது. 

சில மாற்றங்கள் வரக்கூடும் 

ஃபிட்மென்ட் ஃபேக்டர் ஃபார்முலாவின் அடிப்படையில் சம்பளத்தை அதிகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 

8வது ஊதியக்குழுவின் உருவாக்கத்தோடு சில வழக்கமான முறைகளும் மாற்றப்படக்கூடும் என கூறப்படுகின்றது. பத்து வருடங்களுக்கு ஒரு முறை என்பதற்கு பதிலாக அரசு ஒவ்வொரு வருடமும் ஊழியர்களின் சம்பளத்தை மதிப்பாய்வு செய்ய ஆரம்பிக்கலாம் என்று ஊடகக அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது. சம்பள திருத்தத்திற்காக (Salary Hike) ஊழியர்கள் 10 ஆண்டுகள் அதாவது நீண்ட காலம் காத்திருக்க வேண்டாம் என அரசு விரும்புகிறது. அவர்களின் பணித்திறன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்களின் சம்பளத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டும். 7வது ஊதியக் குழுவிலேயே இது பரிந்துரைக்கப்பட்டது. மேலும் சம்பளத்தை உயர்த்த ஊதியக்குழு அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து அம்சங்களையும் மனதில் வைத்து அரசு ஒரு புதிய வழியில் திட்டமிட்டு வருகிறது. 

யார் அதிகம் பயனடைவார்கள்?

குறைந்த ஊதிய வரம்பில் இருக்கும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், அதிக வரம்பில் உள்ளவர்களுக்கு ஊதிய 3 ஆண்டுகளுக்கு ஒரு முறையும் ஊதிய பரீசலனை செய்யப்படக்கூடும் என கூறப்படுகின்றது. ஆனால், இதில் என்ன திட்டமிடப்பட்டது என்பது குறித்து இன்னும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை. தற்போது அரசும் இதைப்பற்றி எதையும் வெளிப்படையாகக் கூறவில்லை. 

மேலும் படிக்க | மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் முக்கிய மாற்றங்கள்: மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News